This Article is From Nov 10, 2018

மகனின் விவாகரத்து பிரச்னையால் லாலு பிரசாத் அப்செட் - சோர்வில் கட்சி தொண்டர்கள்

மூத்த மகன் தேஜ்பிரதாபின் விவாகரத்து பிரச்னையால் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் அப்செட்டில் உள்ளார். இதனால் கட்சி தொண்டர்கள் சோர்வடைந்திருக்கின்றனர்.

மகனின் விவாகரத்து பிரச்னையால் லாலு பிரசாத் அப்செட் - சோர்வில் கட்சி தொண்டர்கள்

விவாகரத்து முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு லாலு பிரசாத் தனது மகனிடம் பேசியுள்ளார்.

Ranchi:

பீகாரில் லாலு பிரசாத் வீட்டிலும், கட்சியிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அவரது மூத்த மகனும், பீகாரின் முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாபுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.

பீகார் முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகள் ஐஸ்வர்யா ராய் என்பவரை தேஜ் பிரதாப் மணந்து கொண்டார். சுமார் 10 ஆயிரம் வி.ஐ.பி.க்கள் முன்னிலையில் இந்த திருமணம் திருவிழாவைப் போல நடைபெற்றது.

இந்த நிலையில், ஐஸ்வர்யாவுக்கு தேஜ் பிரதாப் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த பிரச்னை லாலுவின் வீட்டில் மட்டும் இல்லாமல் அவரது ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தொண்டர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தேஜ் பிரதாபிடம் அவரது குடும்பத்தினர் பலரும் பேச்சுவார்த்தை நடத்தி விட்டனர். ஆனால் அவர் தனது முடிவில் விடாப்பிடியாக இருக்கிறார். இந்த நிலையில் லாலு பிரசாதை தேஜ் பிரதாப் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, விவாகரத்து முடிவை மறு பரிசீலனை செய்யும்படி லாலு பிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார்.

பீகாரில் லாலுவின் குடும்ப விவகாரம் நாள்தோறும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

.