This Article is From Dec 30, 2019

65 வயது தம்பதியினருக்கு முதியோர் இல்லத்தில் நடந்த திருமணம்

சனிக்கிழமையன்று எடுக்கப்பட்ட 67 வயதான மேனன் 65 வயதான செல்வி அம்மாளின் திருமணப் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. “காதல் எல்லா எல்லைகளையும் கடக்கும்” என்று தலைப்பிட்டு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.

திருமண தம்பதிகளான கொச்சானியன் மற்றுல் லட்சுமி அம்மாள்

Thrissur:

கேரளா அரசினால் நடத்தப்படும் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் ஒரு வயதான தம்பதியினர் மறுதிருமணம் செய்து வாழ்வில் இணைந்துள்ளனர்.

கொச்சானியன் மேனன் மற்றும் லட்சுமி அம்மாள் ஆகியோர் 60வவயதின் பிற்பகுதியில் திருச்சூர் மாவட்டம் ராமவர்மாபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சந்தித்து காதலுற்றனர்.

சனிக்கிழமையன்று எடுக்கப்பட்ட 67 வயதான மேனன் 65 வயதான செல்வி அம்மாளின் திருமணப் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. “காதல் எல்லா எல்லைகளையும் கடக்கும்” என்று தலைப்பிட்டு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. 

லட்சுமி சிவப்பு பட்டு சேலை அணிந்து மல்லிகை பூ சூடி அதே நேரத்தில் கொச்சானியன் பாரம்பரியமான பட்டு சட்டை, வேஸ்டி அணிந்து இருப்பதை வைத்துக் கொள்ளலாம். 

மற்றொரு பயனர் ட்விட் பதிவில் “ முதியோர் இல்லத்தில் கேரளாவின் முதல் திருமணம் இது… வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

ஒரு பயனர் இதய இமோஜிகள் மற்றும் ஸ்மைலிகளை பயன்படுத்தி “காதலில் எந்த எல்லையும் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தனர். 

.