This Article is From Oct 09, 2019

INX Media Case: ‘இதுக்குத்தாங்க வந்தேன்…’ - அமலாக்கத் துறையைக் கலாய்த்த Karti Chidambaram!

INX Media case - ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

INX Media Case: ‘இதுக்குத்தாங்க வந்தேன்…’ - அமலாக்கத் துறையைக் கலாய்த்த Karti Chidambaram!

INX Media case - சிபிஐ, ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி கைது செய்தது.

ஹைலைட்ஸ்

  • Karti Chidambaram questioned in connection with INX Media case
  • His father, former Finance Minister P Chidambaram, is in Tihar Jail
  • P Chidambaram's bail plea rejected by Delhi High Court last month
New Delhi:

INX Media Case: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் (P Chidambaram) மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் (Karti Chidambaram), ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு (INX Media Case) விசாரணைக்காக அமலாக்கத் துறை (ED) முன்னர் ஆஜரானார். அவர் விசாரணைக்காக வந்தபோது, பத்திரிகையாளர்கள் முன்னிலையில், “தசரா பண்டிகையை முன்னிட்டு அவர்களுக்கு ஹெலோ சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்” என்று கேலியாக பதில் கொடுத்தார். 

கடந்த 2000 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ, ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி கைது செய்தது. பின்னர், அவரை காவலில் எடுத்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

இதனிடையே, டெல்லி திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் இருக்கும் ப.சிதம்பரம் சிறையிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி பிணை கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் (Delhi High Court) முறையிட்டிருந்தார். அதில், அவருக்குப் பிணை கொடுக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. 

ஜாமீன் கொடுக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், “வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்தால் ஆதாரங்களைக் கலைக்க முடியாது என்றாலும், சாட்சிகளிடம் தாக்கம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது” என்று கூறியது. 

இந்நிலையில், ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றமும் பிணை கொடுக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

.