This Article is From Sep 21, 2018

மக்களவைத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம்: கமல் பேச்சு

‘இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். இங்கு இருக்கும் கோளாறுகளை சரி செய்ய அவர்கள் முயற்சி செய்ய வேண்டும்’ என்று கமல்ஹாசன் (Kamal Haasan) கூறியுள்ளார்

மக்களவைத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம்: கமல் பேச்சு

நடிகரும் மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiyam) கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் (Kamal Haasan), வருகின்ற மக்களவை தேர்தலுக்கு (Lok Sabha Polls) போட்டியிடத் தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில், நேற்று கட்சியின் நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்தப் பயிற்சி பட்டறையின் போது செய்தியாளர்களை சந்தித்த கமல், ‘தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலிலும், இடைத் தேர்தல்களிலும் நாங்கள் போட்டியிடப் போவதில்லை. அதே நேரத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனைத்து விதங்களிலும் தயாராகிக் கொண்டிருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

நீதிமன்றம் மற்றும் காவல் துறை குறித்து அவதூறாக பேசிய பாஜக-வின் (BJP) தேசியச் செயலாளர் எச்.ராஜா (H. Raja) குறித்து, ‘எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும் இந்த அமைப்புகள் பற்றி விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று பதிலளித்தார்.

தொடர்ந்து அவர், ‘படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். இங்கு இருக்கும் கோளாறுகளை சரி செய்ய அவர்கள் முயற்சி செய்ய வேண்டும்’ என்று கருத்து கூறியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.