This Article is From Nov 15, 2018

இத்தாலியில் கரம் பிடித்த ரன்வீர் தீபிகா!

தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங்கின் திருமணம் இத்தாலியில் நடைபெற்றது.

இத்தாலியில் கரம் பிடித்த ரன்வீர் தீபிகா!

இத்தாலியில் திருமணம் செய்து கொண்ட தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங்.

ஹைலைட்ஸ்

  • எட்டு வருடம் காதலுக்கு பின் தற்போது தீபிகா மற்றும் ரன்வீர் திருமணம் செய்த
  • திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளான மெஹந்தி மற்றும் சங்கீத் நடைபெற்றது.
  • இந்த ஜோடியின் திருமண வரவேற்பு பெங்களூர் மற்றும் மும்பையில் நடைபெறும்.
New Delhi:

தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங்கிற்கு வாழ்த்துக்கள். தென் இந்திய திருமண நிகழ்வு இத்தாலியில் அரங்கேறியதாக ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது. செய்தியாளர்களின் தகவல் படி, திருமணத்திற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்னர்களிடம், திருமண புகைப்படங்கள் எதுவும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

சப்யாசாச்சி பிராண்ட் உடையை தீபிகா அணிந்திருந்திருந்தார். வட இந்திய முறைப்படியான திருமணம் பிறகு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. மணமக்களுக்கு திரைப்பட இயக்குனர் கரன் ஜோகர் தனது ட்விட்டர் பதிவின் மூலம் முதல் வாழ்த்தினை பதிவிட்டுள்ளார்.
 

 

 

 

 

கடந்த மாத இறுதியில் தங்களது திருமணம் குறித்த தகவலை ரன்வீர் மற்றும் தீபிகா சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர். நேற்று மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

திருமண கொண்டாட்டங்களை மணமகன் மற்றும் மணமகள் இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது. நந்தி பூஜை தீபிகாவின் பெங்களூரு வீட்டில் நவம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது. அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து ரன்வீர் சிங்கிற்கு ஹல்தி நிகழ்வு மும்பையில் நடைபெற்றது.

இத்தாலியிலிருந்து திரும்பியதும், இந்த ஜோடியின் திருமண வரவேற்பு பெங்களூர் மற்றும் மும்பையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது


 

.