This Article is From Apr 02, 2020

டெல்லி வன்முறையில் சதி: ஜாமியா பல்கலைக்கழக பிஎச்.டி மாணவர் கைது!

Delhi violence: இதனிடையே, கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர் மீரான் ஹைதர், சிறையில் உள்ள லாலு யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் டெல்லி இளைஞரணி பிரிவின் தலைவர் என்பதும் தெரியவந்துள்ளது

டெல்லி வன்முறையில் சதி: ஜாமியா பல்கலைக்கழக பிஎச்.டி மாணவர் கைது!

Delhi violence: ஜாமியா பல்கலைக்கழக பிஎச்.டி மாணவர் கைது!

ஹைலைட்ஸ்

  • டெல்லி வன்முறை: ஜாமியா பல்கலைக்கழக பிஎச்.டி மாணவர் கைது
  • வன்முறையில் முக்கிய பங்கு வகித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்
  • டெல்லி வன்முறையில் 54 பேர் உயிரிழந்தனர்.
New Delhi:

டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏற்பட்ட பெரும் வன்முறையில் முக்கிய பங்கு வகித்ததாக ஜாமியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பிஎச்.டி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர் மீரான் ஹைதர், சிறையில் உள்ள லாலு யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் டெல்லி இளைஞரணி பிரிவின் தலைவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்த போது, சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. 4 நாட்கள் நடந்த இந்த வன்முறையில் வடகிழக்கு டெல்லியில் சுமார் 54 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 

இதுதொடர்பாக டெல்லி போலீசார் கூறும்போது, உத்தரப் பிரதேசத்திலிருந்து குண்டர்களை ஒழுங்கமைக்கவும், இலக்கு வைக்க வேண்டிய பகுதிகளை அடையாளம் காணவும் வாட்ஸ்அப் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, "அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கு" அழைப்பு விடுத்த போதிலும், சில பகுதிகளில் வன்முறை தொடர்ந்தது.

இந்த வன்முறையால் வடகிழக்கு டெல்லி பகுதி போர் மண்டலம் போல தோற்றமளித்தது. வீடுகளும், கடைகளும் எரிக்கப்பட்டன. சில எதிர்ப்பாளர்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதும் வன்முறை தொடர்பான வீடியோக்களில் காணமுடிந்தது. போராட்டக்காரர்கள் பலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளானார்கள்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நாட்டிற்கு வருகை தந்திருந்த நேரத்தில் இந்த வன்முறை நடந்ததால், அது "திட்டமிடப்பட்டு நிகழ்ந்த வன்முறை என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

.