தமிழக அமைச்சர் ஒருவரது வீட்டிலும் இந்த ஐடி ரெய்டு நடந்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை மற்றும் வேலூரில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருவதாக நமக்கு நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வந்துள்ளது.
ரியல் எஸ்டேட் தொழில்திபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இன்று காலை ஆரம்பித்த ஐடி ரெய்டு, பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழக அமைச்சர் ஒருவரது வீட்டிலும் இந்த ஐடி ரெய்டு நடந்து வருவதாக கூறப்படுகிறது. ரெய்டு குறித்தும், இந்த ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் இதுவரை எந்த அதிகாரபூர்வத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.