This Article is From Sep 18, 2018

இஸ்ரோ வழக்கு: தீர்ப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன் உயிரிழந்த விஞ்ஞானி

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி கே. சந்திரசேகர் (K Chandrasekhar) உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது

இஸ்ரோ வழக்கு: தீர்ப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன் உயிரிழந்த விஞ்ஞானி

முன்னாள் விஞ்ஞானி கே. சந்திரசேகர் (K Chandrasekhar), குற்றம் சாட்டப்பட்ட 6 விஞ்ஞானிகளில் ஒருவர்

Bengaluru:

இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருந்த நம்பி நாராயணன் (Nambi Narayanan) கடந்த 1994-ல் இஸ்ரோ (ISRO) குறித்த ரகசியங்களை மாலத்தீவை சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு விற்று விட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக நம்பி நாராயணன் மற்றும் டி.சசி குமரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து 50 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நம்பி நாராயணன் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு ஒருகட்டத்தில் போலீசிடம் இருந்து சிபிஐ-க்கு மாறியது. சிபிஐ விசாரணையில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் நம்பி நாராயணனை தேவையின்றி கைது செய்து நடவடிக்கை எடுத்த போலீஸ் உயர் அதிகாரிகள் சிபி மேத்யூ, கே.கே. ஜோஷ்வா மற்றும் எஸ். விஜயன் ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து இந்த மூவருக்கும் எதிராக நம்பி நாராயணன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, நம்பி நாராயணனை தேவையின்றி கைது செய்து அவரை துன்புறுத்தியுள்ளனர். மன ரீதியில் கொடூரமாக சித்ரவதை செய்தலுக்கும் இதனை ஒப்பிடலாம். கேரள போலீஸ் அதிகாரிகள் 3 பேரை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே. ஜெயின் கமிட்டி விசாரணை செய்யும். இந்த வழக்கில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி கே. சந்திரசேகர் (K Chandrasekhar) உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. தீர்ப்பு குறித்த அறிவிப்புக்கு மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்தார் என்று அவரது மனைவி விஜயம்மா தெரிவித்துள்ளார்.

.