This Article is From Oct 18, 2019

INX Media வழக்கு: குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்தது சிபிஐ- P Chidambaram-ன் நிலை என்னவாகும்?

INX media case: இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

INX Media வழக்கு: குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்தது சிபிஐ- P Chidambaram-ன் நிலை என்னவாகும்?

INX media case: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் (INX Media Case) சிபிஐ (CBI) அமைப்பு, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகைத் தாக்கல் செய்துள்ளது. வழக்கு குறித்தான விசாரணை வரும் 21 ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

குற்றப் பத்திரிகையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் (P Chidambaram), அவரது மகன் மற்றும் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், இந்தியராணி முகர்ஜி உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்த 2000 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ, ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி கைது செய்தது. பின்னர், அவரை காவலில் எடுத்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

.