This Article is From Mar 05, 2019

ஏசி வசதியுடன் 3+2 சீட்டுகள் கொண்ட பேருந்துகள் அறிமுகம்! - இன்று இலவசமாக பயணிக்கலாம்!

தமிழகத்தில் முதன்முறையாக ஏசி வசதியுடன் 3+2 சீட்டுகள் கொண்ட அரசு பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஏசி வசதியுடன் 3+2 சீட்டுகள் கொண்ட பேருந்துகள் அறிமுகம்! - இன்று இலவசமாக பயணிக்கலாம்!

சென்னை தலைமைசெயலகத்தில் ரூ.133 கோடி மதிப்பிலான 500 புதிய அரசு பேருந்துகளின் செயல்பாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதில் முதல் முறையாக 3+2 இருக்கை வசதி கொண்ட பேருந்துகள் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய 500 பேருந்துகளில், ஏசி வசதியுடன் 3+2 இருக்கை வசதி கொண்ட பேருந்துகளும் அடங்கும்.

இவை சென்னை முதல் திருவண்ணாமலை மற்றும் வேலூர் பகுதிகளுக்கு இன்று முதல் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் இதுபோல் 3+2 பேருந்து அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என்பதால், பேருந்து அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாளான இன்று குளிர்சாதன வசதியுடைய பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

.