This Article is From Aug 02, 2018

துபாய் லாட்டரியில் 7 கோடி வென்ற இந்தியர்

குவைத்தில் வசிக்கும் சந்தீப் மேனன், இப்பரிசுச்சீட்டு 1999இல் தொடங்கியதில் இருந்து ஒரு மில்லியன் டாலர்கள் அளவு வென்ற 132வது இந்தியர் ஆவார்

துபாய் லாட்டரியில் 7 கோடி வென்ற இந்தியர்
Dubai:

துபாய் டூட்டி ஃப்ரீ பரிசுச்சீட்டில் இந்தியர் ஒருவர் ஒரு மில்லியன் டாலர் (6,83,95000ரூபாய்) கடந்த செவ்வாய் அன்று வென்றுள்ளார்.

குவைத்தில் வசிக்கும் சந்தீப் மேனன், இப்பரிசுச்சீட்டு 1999 தொடங்கியதில் இருந்து ஒரு மில்லியன் டாலர் வெல்லும் 132 இந்தியர் ஆவார்.

"என் வாழ்க்கையில் வெற்றியே கிட்டியதில்லை. அதுவும் இத்தனைப் பெரிய வெற்றி உறுதியாக இல்லை. இதற்காக துபாய் டூட்டி ஃப்ரீக்கு நன்றி" என்று சந்தீப் கூறினார்.

சாந்தி போஸ் என்னும் மற்றொரு இந்தியரும் இதில் BMW R Nine T ஸ்க்ராம்ப்ளர் மோட்டர்பைக்கினை வென்றுள்ளார்.

அரபு அமீரகத்தின் இரண்டு பெரிய லாட்டரிகளான அபு தாபி பிக் டிக்கட் & துபாய் டூட்டி ப்ரீ தரவுகளின் படி, இந்தியர்கள் அதிகம் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கின்றனர்.

.