This Article is From Oct 24, 2018

மகாராஷ்டிர தலைமை செயலாளர் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

படகில் சென்றவர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடலோர காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Mumbai:

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைமை செயலர் மற்றும் அரசின் உயர் அதிகாரிகளுடன் சிவாஜி சமாரக் அருகே படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அரசுப் பணிக்காக உயர் அதிகாரிகள் அதில் சென்றனர். 

மும்பை நரிமன் பாயிட்டுக்கு மேற்கே 2.6 கிலோ மீட்டர் தொலைவில் படகு சென்றபோது, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
இதையடுத்து, கடலில் தத்தளித்தவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டனர். மேலும் கடலோர காவல் படைக்கு சொந்தமான 
ஹெலிகாப்டர்களும் மீட்பு வேட்டை நடத்தின. 

இதில் பெரும்பாலானவர்கள் மீட்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

.