This Article is From Jun 23, 2018

புற்று நோயை தடுக்கும் வேம்பு, ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு

ஐதராபாத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் வேம்பின் மருத்துவ குணத்தைப் பற்றி ஒரு வியக்கதக்க கண்டுபிடிப்பு செய்துள்ளனர்

புற்று நோயை தடுக்கும் வேம்பு, ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு

ஹைலைட்ஸ்

  • புற்றுநோயை குணப்படுத்துவதற்கு வேம்பிலுள்ள நிம்போலீட் உதவியாக இருக்கிறது
  • வேம்பை தொடர்ச்சியாக சாப்பிடுவதால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்
  • மனித உடலில் உள்ள இன்சுலின் குறைப்பாட்டை வேம்பு தவிர்க்கிறது

வேம்பின் மருத்துவ குணத்தைப் பற்றியும், ஆயுர்வேதத்தில் அதன் பயன்பாடு பற்றியும் நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் சமீபத்தில், ஐதராபாத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த மூலிகை பற்றி ஒரு வியக்கதக்க கண்டுபிடிப்பு செய்துள்ளனர்.

புற்றுநோய்க்கு எதிரான ஆயுதமாக வேம்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதெ அவர்களின் ஆராய்ச்சி. இந்த மூலிகைகளிலிருந்து பெறப்பட்ட ஒரு பைட்டோகெமிக்கல், அதாவது நிம்பிலீட், புற்றுநோயை குணப்படுத்த உதவுகிறது. இந்த கலவை பல புற்றுநோய்களுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. இருப்பினும், நீண்டகால ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய்க்கான வணிக மருந்துகளில் நிம்பிலீட் பயன்பாட்டை புறக்கணிக்கின்றனர்.

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கலவையின் வாய்வழி பயன்பாடு, புற்றுநோய்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்காது. ஏனெனில் இந்த முறையில், உடல் நிம்போலீட் சரியாக உறிஞ்சுவதில் தோல்வியடைந்துள்ளது. இது நிம்போலீட்டை அடிப்படையாகக் கொண்ட மருந்துகளின் உற்பத்தி செயல்முறைக்கு ஒரு பெரிய தடை ஆக உள்ளது. தேசிய ஃபார்மாசிட்டிக்கல் இன்ஸ்டிட்யூட்டின் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு, புற்றுநோய் சிகிச்சையில் வேம்பு பயன்படுத்துவதற்கான குழப்பத்தை போக்கியுள்ளது. தொண்டை, கணைய மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவற்றுக்காக இந்த கலவை சோதிக்கப்பட்டது, மேலும் அவை அனைத்தும் அவர்களுக்கு உயர்ந்த வெற்றி விகிதத்தை வெளிப்படுத்தின.

இந்திய கண்டத்துக்கு சொந்தமான மிக முக்கியமான மருத்துவ செடிகளில் வேம்பு ஒன்றாகும். எனவே, தாமதமின்றி, வேம்பின் ஆரோக்கிய நலன்களைப் பார்ப்போம்

1. ஆண்டிபாக்ட்டிரியல் பண்புகள்:

வேம்பு ஆண்டிபாக்ட்டிரியல் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பிற்கு பரவலாக அறியப்படுகிறது. இந்த மூலிகைச் சாற்றில் உங்கள் ஒட்டுமொத்த சுகாதாரம் பாதுகாக்கப்படுவதால் உங்கள் நோய் எதிர்ப்பு மன்டலம் வலுவடைகிறது. இந்த மூலிகை பொதுவாக தோல் பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வு கிடைக்கிறது.

2 . உங்கள் உடலைச் சுத்தம் செய்கிறது:

ஒவ்வொரு நாளும் நம் உடலில் அதிக அளவில் நச்சுகள் சேர்கிறது. இதற்கு காரணம் மாசுக்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை ஆகும். இந்நச்சுக்கள் நம் உடலுக்கு சேதம் விளைவிக்கும். தினமும் வேம்பை ஏதாவதொரு வழியில் உட்கொள்வது நச்சுக்களை நீக்கும். இது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவற்றின் செயல்பாடுகளை தூண்டிவிடுவதால் உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது.இது இயற்கையாக உடலிலுள்ள நச்சுகள் அகற்றும் சக்தி வாய்ந்தது ஆகும்.

3. இரைப்பை மற்றும் குடல் நன்மைகள்:

வேப்பிலை தொடர்ந்து உட்கொண்டால் குடல் எரிச்சல் மற்றும் இரைப்பை தொந்தரவுகளைத் தவிர்க்கலாம். இது வயிற்றுப் புண் , புழுக்கள், மலச்சிக்கல் மற்றும் தொற்றுநோய் ஆகியவைகளுக்கு எதிர்காரணியாக அமைகிறது.

4. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது:

வேம்பின் பயன்பாடுகள் மிக முக்கியமான ஒன்று நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது ஆகும். வேம்பு இன்சுலின் குறைபாட்டை தவிர்க்கிறது.இதில் உள்ள வேதிப்பொருட்கள் மனித உடலுக்கு இன்சுலின் தேவையான அளவு கிடைப்பதை உறுதி செய்து அதனை தேவைக்கேற்ப பயன்படுத்தச் செய்கிறது. வேம்பு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். நோய் அதிகரிப்பதையும் தவிர்க்கிறது.

5. வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:

இன்றைய நாட்களில் பெரும்பாலும் பல் சார்ந்த பொருட்களில் வேம்பு முக்கிய மூலப்பொருளாக உள்ளது ‌. பற்பசை மற்றும் மவுத்வாஷ் போன்றவற்றில் வேம்பு சேர்க்கப்படுகிறது.ம்இதற்கு காரணம் வேம்பில் உள்ள நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடும் குணம். வேம்பு வாயிலுள்ள பாக்டீரியாக்களை அழிக்கிறது. வாய் துர்நாற்றத்தை தவிர்க்கிறது.

6. இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கான நன்மைகள்:

இயற்கயான முறையில் கருத்தடை விரும்வோர்க்கு கருத்தடை காரணியாக உள்ளது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் எந்த விதப் பக்க விளைவுகள் இல்லாதது. இதனால் லிபிடோ மற்றும் பாலியல் நோய்கள் பரவுவதை தடுக்க உதவும்.

.