This Article is From Sep 26, 2018

பட்டப்பகலில் போலீசார் முன்பு நடந்த படுகொலை - ஐதராபாத்தை உலுக்கிய சம்பவம்

மிகவும் பரபரப்பான சாலையில் பட்டப்பகல் நடந்த கொலை சம்பவம் ஐதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

கொலை செய்யப்பட்ட ரமேஷ் என்பவர் கொலை வழக்கில் தொடர்புடையவர்

ஹைலைட்ஸ்

  • 2 பேர் துரத்திச் சென்று கொலை செய்தனர்
  • ஓட முடியாமல் நின்றதும் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொன்றனர்
  • 3 போலீசார் இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துள்ளனர்
Hyderabad:

ஐதராபாத் நகரில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சாலையில் இன்று நடந்திருக்கும் படுகொலை சம்பவம் நகரின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி உள்ளது.

ராஜேந்திரா நகர் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை பொதுமக்களில் சிலர் வீடியோ எடுத்து அதனை இணைய தளத்தில் உலாவ விட்டுள்ளனர். இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. 2 பேர் ஒருவரை துரத்திச் செல்கின்றனர். துரத்தப்படும் நபர் நின்றதும், துரத்தியவர்கள் தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் அவரை வெட்டினர். ரத்தம் சொட்டச் சொட்ட வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விடுகிறார். இதன் பின்னர் கொலையாளிகள் 2 பேரும் ரொம் கேஷுவலாக அந்த இடத்தை விட்டு செல்கின்றனர்.

இந்த சம்பவத்தை 3 போலீசார் வேடிக்கை பார்த்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். விசாரணையில் கொல்லப்பட்டவர் பெயர் ரமேஷ் என்பதும் மகேஷ் கவுட் என்பவரை கொன்ற வழக்கில் அவர்தான் முக்கிய குற்றவாளி என்பதும் தெரிய வந்துள்ளது.

ரமேஷை கொன்றவர்கள் மகேஷ் கவுடின் அப்பா மற்றும் மாமா என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், பாதசாரிகள் என ஆயிரக்கணக்கானோர் செல்லும் மெய்ன் ரோட்டில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதனால் ஐதராபாத் மக்கள் அச்சத்திற்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகியுள்ளனர்.
 

.