This Article is From Feb 16, 2019

ஐஸ்லாந்தில் ஹனிமூனை கொண்டாடும் விசாகன் – சௌந்தர்யா ஜோடி

கணவர் விசாகனுடன் ஐஸ்லாந்தில் இருக்கும் புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார் சௌந்தர்யா

ஐஸ்லாந்தில் ஹனிமூனை கொண்டாடும் விசாகன் – சௌந்தர்யா ஜோடி

ஐஸ்லாந்தில் விசாகன் – செளந்தர்யா

ஹைலைட்ஸ்

  • வாழ்க்கையை வாழ்வதாக கூறியுள்ளார் சௌந்தர்யா
  • விசாகன் - சௌந்தர்யாவுக்கு கடந்த 11-ம்தேதி திருமணம் நடந்தது
  • ஐஸ்லாந்தில் ஹனிமூனை கொண்டாடுகிறது விசாகன் - சௌந்தர்யா ஜோடி
New Delhi:

கணவர் விசாகனுடன் சௌந்தர்யா ஹனிமூனை ஐஸ்லாந்தில் கொண்டாடி வருகிறார். விசாகனுடன் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் சவுந்தர்யா பகிர்ந்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், விசாசகனுக்கும் இடையே கடந்த 11-ம்தேதி திருமணம் நடைபெற்றது. திரையுலக, அரசியல் பிரபலங்கள், வி.ஐ.பி.க்கள் என ஏராளமானோர் இந்த திருமணத்தில் கலந்து  கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

 

 

இந்த நிலையில் விசாகன் – சௌந்தர்யா ஜோடி ஹனிமூனை ஐஸ்லாந்தில் கொண்டாடி வருகிறது. இது சம்பந்தமான புகைப்படங்களை சௌந்தர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘'ஐஸ்லாந்தில் ஹனிமூனை கொண்டாடி வருகிறோம். வாழ்க்கையை வாழ்கிறோம். கடவுள் எங்களுடன் இருக்கிறார். வேதை மிஸ் பண்றேன்.‘' என்று கூறியுள்ளார்.

 

 

சௌந்தர்யாவின் முதல் கணவர் அஷ்வினுக்கு பிறந்தவர்தான் அவரது மகன் வேத். விசாகனும் விவாகரத்து பெற்றவர். இரு வீட்டாரிடமும் சம்பந்தம் பேசிய தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், இந்த திருமணம் நடப்பதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.

வி.ஐ.பி. 2-ல் நடித்த கஜோலும் சௌந்தர்யாவின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A VIP wedding ..... wishing my sweet director a wonderful life ahead ....

A post shared by Kajol Devgan (@kajol) on

 

திருமணத்திற்கு முன்பாக ரிசப்ஷன் நடைபெற்றது. இதில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அதோடு சங்கீத் விழா, மெஹந்தி விழா உள்ளிட்டவையும் நடைபெற்றன.

இந்த புகைப்படங்களை ட்விட்டரில் ஷேர் செய்துள்ள சௌந்தர்யா, ''எனது மகிழ்ச்சியை வார்த்தையால் வெளிப்படுத்த முடியாது. ஆசிர்வதிக்கப்பட்டதைப் போன்று உணர்கிறேன். எனது வாழ்வில் 3 பேர் முக்கியமானவர்களாக ஆகி விட்டனர். எனது அன்பான அப்பா… எனது மகன்… இப்போது விசாகன்'' என்று கூறியுள்ளார்.

 

 

 

முன்னதாக அஷ்வின் என்ற தொழிலதிபரை சௌந்தர்யாவும், கனிகா குமரன் என்ற பத்திரிகைய ஆசிரியரை விசாகனும் மணந்து, அவர்களிடம் இருந்து விவகாரத்து பெற்றுள்ளனர்.

கிராஃபிக் டிசைனர் மற்றும் படத் தயாரிப்பாளராக சௌந்தர்யா இருக்கிறார். மருந்து நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வரும் விசாகன், வஞ்சகர் உலகம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

 

 

.