This Article is From Jun 05, 2020

மீண்டும் ஒரே நாளில் 1000 பேருக்கு மேல் பாதிப்பு - சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா!

ஜூன் 5 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 18,693 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரே நாளில் 1000 பேருக்கு மேல் பாதிப்பு - சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா!

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 3,388 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • நேற்று மட்டும் 1,072 பேருக்கு சென்னையில் கொரோனா உறுதி
  • மணலி மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா பாதிப்பு உள்ளது

தமிழகத்தில் நேற்று 1,384 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,072 பேர். ஒட்டுமொத்த அளவில் 27,256 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 585 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 14,901 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 12,132 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 220 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (04.06.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 670

மணலி - 259

மாதவரம் - 490

தண்டையார்ப்பேட்டை - 2,261

ராயபுரம் - 3,388

திரு.வி.க நகர் - 1,855

அம்பத்தூர் - 684

அண்ணா நகர் - 1,660

தேனாம்பேட்டை - 2,136

கோடம்பாக்கம் - 2,123

வளசரவாக்கம் - 975

ஆலந்தூர் - 289

 அடையாறு - 1,042

பெருங்குடி - 334

சோழிங்கநல்லூர் - 339

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 188

ஜூன் 5 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 18,693 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 3,388 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 2,261 மற்றும் 2,136 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 259 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

.