This Article is From Dec 15, 2019

Heavy Rain Warning - மீண்டும் தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை!

Heavy Rain Warning for TN - 'தமிழகத்தில் இயல்புநிலை மழை எட்டப்பட்டுவிட்டாலும், சென்னையைப் பொறுத்தவரை, 13 விழுக்காடு இயல்புநிலையை விடக் குறைவாகவே மழைப் பதிவாகியுள்ளது'

Heavy Rain Warning - மீண்டும் தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை!

Heavy Rain Warning for TN - "சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது."

Heavy Rain Warning for TN - தமிழகத்தில் மீண்டும் எப்போது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்புநிலையான 44 சென்டி மீட்டர் அளவினை இன்று (15.12.2019) அடைந்துள்ளது. 

நேற்று கேரளா மற்றும் தமிழக எல்லையை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சி இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் நிலைக் கொண்டுள்ளதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

தமிழகத்தில் இயல்புநிலை மழை எட்டப்பட்டுவிட்டாலும், சென்னையைப் பொறுத்தவரை, 13 விழுக்காடு இயல்புநிலையை விடக் குறைவாகவே மழைப் பதிவாகியுள்ளது. 

தமிழகத்தைப் பொறுத்தவரை பெரம்பலூரில் மிக அதிகமாக, 24 விழுக்காடு குறைவான மழைப் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக, திருச்சி மாவட்டம், நதியார் தலையில் 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.