Heavy Rain Warning- சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறத்தைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு முறை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை (North East Monsoon) ஆரம்பித்துள்ள நிலையில், இன்று சில மாவட்டங்களில் கனமழை (Heavy Rain) முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம், “தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையானது முற்றிலும் நீங்கியுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறத்தைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு முறை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.” என்று தகவல் தெரிவித்துள்ளது.