This Article is From Dec 13, 2019

Heavy Rain Alert - தஞ்சை, நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Heavy Rain Alert for Tamilnadu - "அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்"

Heavy Rain Alert - தஞ்சை, நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Heavy Rain Alert for Tamilnadu - "சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது”

Heavy Rain Alert for Tamilnadu - தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குப் பரவலாக மழை பெய்யும் எனவும், 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம், வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும்,

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது 

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

.