This Article is From Nov 19, 2018

நேர்மையின் அழகி நயன்தாரா

சினிமா பிரபலங்களும், ரசிகர்கள் பலரும் நயன்தாராவிற்கு வாழ்த்துச் சொல்லி வருகிறார்கள். நேர்மையின் அழகிக்கு வாழ்த்து சொல்லாமல் வேறு யாருக்கு வாழ்த்து சொல்வார்கள். பிறந்த நாள் வாழ்த்துகள் நயன்.

நேர்மையின் அழகி நயன்தாரா

தமிழ் திரையிலகில் ஒரு நடிகை சர்ச்சைகளுக்கு ஆளாக நேர்ந்தால் அந்த நடிகைக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குறையும். ஒரு நடிகர் சர்ச்சைகளிளோ அல்லது அவரைப் பற்றிய அவதூறுகளிலோ மாட்டினால் ஒரு போதும் அவரின் தொழில் சார்ந்த விஷயங்களை பாதிப்பதில்லை. ஆனால் நடிகைகளுக்கு இதில் ஒரு போதும் சலுகைகள் இருந்ததில்லை. ஆனால் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மட்டும்தான் இதற்கு விதிவிலக்கு.

சிம்பு, பிரபு தேவா, என இவர்களுடனான காதல் உண்மையாக இருந்த போதிலும் வாழ்வின் ஒரு கட்டத்தில் நயன்தாராவின் வாழ்வில் எங்கோ முறிந்து நின்று விட்டாலும் கூட நயன்தாராவுக்கு பொது சமூகத்தின் பார்வையிலும் இளைஞர்களின் மத்தியிலும் இருக்கும் மதிப்பு ஒரு போதும் குறைந்ததில்லை. மக்கள் மத்தியில் துளி கலங்கமும் இல்லாத தேவதையாக மக்களால் ரசிக்கக் கூடிய வரத்தை நயன்தாரா மட்டுமே பெற்றிருக்கிறார்

இந்த கலங்கமின்மையை பெற்றுத் தந்தது எது...? நயன்தாராவின் நேர்மை மட்டும்தான் கலங்கமின்மையை பட்டமாக பெற்றுக் கொடுத்துள்ளது. தனிப்பட்ட வாழ்விலும் சினிமா வாழ்க்கையிலும் நயன்தாராவிடம் இருந்த நேர்மை எல்லோருக்கும் வாய்த்து விடாது.

நயன்தாரா பிரபு தேவாவுடன் காதலில் இருந்தபோது அவரின் பெயரை டாட்டூவாக குத்திக் கொண்டு காதலின் உறுதித் தன்மையை காட்டத் தயங்கியதில்லை. அதே பிரவு தேவாவை விட்டுப் பிரிந்தபின், ஒரு பேட்டியில் “அவரைப் பிரிவேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை ஆனாலும் பிரிந்து விட்டேன்” என்று தான் பதில் சொல்லினார். தன் வாழ்வின் நேர்மையை எதன் பொருட்டும் மறைக்காத மனம் நயன்தாராவிற்கு எப்போதும் உண்டு.

 

ராமாயணத்தை திரைப்படமாக எடுக்க முயன்ற போது சீதையாக நடிக்க ஒப்புக்கொண்டது பெரும் சர்ச்சையானது. பலரிடம் காதல் கொண்ட ஒருத்தி எப்படி சீதை கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்று கொதித்து கொந்தளித்தது பொதுச் சமூகம். எதிர்ப்புகளைத் தாண்டி அப்படத்தில் நடித்தார். படப்பிடிப்பு நடந்து முடியும் வரை சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு இதிகாசத்தில் சீதையின் வாழ்வு எப்படி சொல்லப்பட்டிருந்ததோ அதை போன்ற வாழ்க்கை முறையிலே வாழ்ந்து நடித்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருப்பார். இதுதான் நயன்தாரா ஒரு கதாபாத்திரத்துக்கு கொடுத்த நேர்மையான உழைப்பு.

 

தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் தன் வாழ்க்கையை பகிர்ந்து வருகிறார். சினிமா உலகிலும் பெண்ணை மையப்படுத்திய சினிமாவுக்கே முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார். அந்தக் கதாபாத்திரங்கள் எப்போதும் நல்லது மட்டுமே செய்யும் என்றில்லாமல் நெகட்டிவ் கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கத் தொடங்கியுள்ளார். தன்னுடைய 34 பிறந்த நாளை கொண்டாடுகிற நயன் தன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாகவும், போட்டோக்களை போட்டும் பகிர்ந்துள்ளார்.

 

சினிமா பிரபலங்களும், ரசிகர்கள் பலரும் நயன்தாராவிற்கு வாழ்த்துச் சொல்லி வருகிறார்கள். நேர்மையின் அழகிக்கு வாழ்த்து சொல்லாமல் வேறு யாருக்கு வாழ்த்து சொல்வார்கள். பிறந்த நாள் வாழ்த்துகள் நயன்.


 

.