This Article is From Dec 19, 2018

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எப் 11

ISRO : இந்த ஆண்டு இஸ்ரோ அமைப்பு மேற்கொள்ளும் 17வது மிஷன் இது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் 69வது ராக்கெட் இதுதான்

ISRO : ஜிசாட்-7, ஜிசாட்-6 ஆகிய ஏவுகணைகளுடன் ஜிசாட்-7ஏ ஏவுகணையும் பாதுகாப்புப் படையை நவீனமாக்க உதவப் போகின்றன. 

ஹைலைட்ஸ்

  • ஜிசாட்-7ஏ (GSAT-7A) என்கின்ற ஏவுகணை இன்று விண்ணில் ஏவப்படுகிறது
  • இந்தியன் ஆங்கிரி பர்ட்’ என்கின்ற இன்னொரு பெயரும் இதற்கு உள்ளது
  • இந்த ஆண்டு இஸ்ரோ அமைப்பு மேற்கொள்ளும் 17வது மிஷன் இது
New Delhi:

ஜிசாட் -7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எப் 11 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது இந்திய எல்லை பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவது, விமான பயன்பாட்டிற்கு உதவும் வகையிலான ‘ஜிசாட்- 7ஏ' தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி-எப் 11 ராக்கெட் உதவியுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு  மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ, விண்ணில் ஏவும் 2018ஆம் ஆண்டின் கடைசி ராக்கெட்டை இதுவாகும்.

மேலும், இந்த ஆண்டு இஸ்ரோ ஏவும் 17வது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிசாட்-7ஏ (GSAT-7A) என்கின்ற ஏவுகணை, மூலம் விமானப் படையில் இருக்கும் அனைத்துவித விமானங்கள், உபகரணங்கள் ஒரு தளத்திற்குக் கீழ் கொண்டு வரப்படும். இதனால் இந்திய விமானப் படை மேலும் நவீனமாகும். 

ஜிசாட்-7, ஜிசாட்-6 ஆகிய ஏவுகணைகளுடன் ஜிசாட்-7ஏ ஏவுகணையும் பாதுகாப்புப் படையை நவீனமாக்க உதவப் போகிறது. இந்த ஏவுகணைக்கு, ‘இந்தியன் ஆங்கிரி பர்ட்' என்கின்ற இன்னொரு பெயரும் உள்ளது.

10 முக்கியத் தகவகள்:

1. 2,250 கிலோ எடை கொண்ட ஜிசாட்-7ஏ, ஏவுகணை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய்ந்தது. 

2. இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், ‘இந்த புதிய ஏவுகணையின் மூலம், விமானங்கள் மட்டுமின்றி சிறிய உபகரணங்கள் கூட ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்படும்' என்று தெரிவித்துள்ளார். 

3. 'இந்திய விமானப் படையை மேலும் நவீனமாக்க இந்த ஜிசாட்-7ஏ ஏவுகணை மிகவும் உறுதுணையாக இருக்கும்' என்று விமானப் படை வட்டாரங்கள் கூறுகின்றன.

4. இந்திய கப்பல் படைக்கு உதவும் வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு, ஜிசாட்-7 என்கின்ற ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம், தகவல் தொடர்புக்கு வெளிநாட்டு செயற்கைக்கோள்களை நம்பி இருப்பது தவிர்க்கப்பட்டது. 

5. இந்திய விமானப் படை, இதுவரை வெளிநாட்டைச் சேர்ந்த செயற்கைக் கோள்கள் மூலமே, அதி நவீன தகவல் தொடர்பு விவகாரங்களைச் செய்து வந்தன. ஆனால், இனி அப்படி இருக்காது எனப்படுகிறது. 

6. சமீபத்தில் இந்திய ராணுவ அமைச்சகம், ‘பாதுகாப்பு விண்வெளி ஏஜென்சி'-ஐ உருவாக்க ஒப்புதல் அளித்தது. இந்த ஏஜென்சியின் மூலம் விமானப் படையிடம் இருக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி, நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த முடியும்.

7. ஜிசாட்-7, ஜிசாட்-6 ஆகிய ஏவுகணைகளுடன் ஜிசாட்-7ஏ ஏவுகணையும் பாதுகாப்புப் படையை நவீனமாக்க உதவப் போகின்றன. 

8. இதற்கு முன்னர் நாவிக் என்கின்ற செயற்கைக்கோள், நாட்டிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் குறித்த விவரங்களை தந்து கொண்டிருந்தது. 

9. இன்று செலுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள்  50 மீட்டர் உயரம் கொண்டது. இது 17 மாடி கட்டடத்துக்குச் சமம். அதன் மொத்த எடை 440 கிலோ ஆகும். 

10. இந்த ஆண்டு இஸ்ரோ அமைப்பு மேற்கொள்ளும் 17வது மிஷன் இதுவாகும்.

.