This Article is From Dec 28, 2018

‘உங்களைப் பற்றி படம் வந்துள்ளதே அது குறித்து…?’- என்ன சொன்னார் மன்மோகன் சிங்

மன்மோகன் சிங், ஐமுகூ ஆட்சியில் பிரதமராக பதவி வகித்ததை வைத்து ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது

‘உங்களைப் பற்றி படம் வந்துள்ளதே அது குறித்து…?’- என்ன சொன்னார் மன்மோகன் சிங்

இந்தப் படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி வெளிவர உள்ளது

New Delhi:

முன்னாள் பிரமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதமராக பதவி வகித்ததை வைத்து ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற பயோ-பிக் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி வெளிவர உள்ளது. நேற்று படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்நிலையில், மன்மோகன் சிங்கிடமே படத்தைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

தொடர்ந்து பல்வேறு தரப்பிலும் இந்த டிரெய்லர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. 2004 முதல் 2008 வரை மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற ஆங்கில புத்தகத்தைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது மன்மோகனிடம், ‘உங்களைப் பற்றி ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதே, அது குறித்து என்ன நினைக்கிறீர்கள்..?' என்று கேட்கப்பட்டது. அதற்கு சிங், எந்த வித பதிலும் சொல்லாமல் அமைதியாக நகர்ந்து சென்றுவிட்டார்.
 

மகாராஷ்டிரா இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்யஜீத் தம்பே படேல், திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘படம் வெளி வரும் முன்னர் எங்களுக்கு ஒரு முறை போட்டுக் காட்ட வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். 

அதே நேரத்தில் பாஜக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், டிரெய்லரை பகிர்ந்து, ‘ஒரு குடும்பம் இந்த நாட்டை எப்படி 10 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தது என்பதைப் பாருங்கள். டாக்டர்.மன்மோகன் சிங் ஒரு பகடைகாயாக பயன்படுத்தப்பட்டாரா. காங்கிரஸ் கட்சியின் உள்ளேயிருந்த கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படத்ததின் டிரெய்லரைப் பாருங்கள். வரும் ஜனவரி 11 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது' என்று பதிவிட்டுள்ளது. 

.