This Article is From Oct 05, 2019

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் என்பது அவ்வளவு எளிதானது அல்ல: ஜெய்சங்கர்

வர்த்தக சிக்கல்களை முடிவுக்குக் கொண்டு வருவது இந்தியா ஏற்றுமதியை அதிகரிக்கவும் உள்நாட்டு நுகர்வு வீழ்ச்சியால் ஏற்படும் பொருளாதார மந்தநிலையை குறைக்கவும் உதவும்.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் என்பது அவ்வளவு எளிதானது அல்ல: ஜெய்சங்கர்

இந்திய பொருளாதார உச்சி மாநாட்டில் ஜெய்சங்கர்

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் என்பது அவ்வளவு எளிதானது அல்ல என வெளியுரவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் உலக பொருளாதார மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய பொருளாதார உச்சி மாநாட்டில் பேசிய ஜெய்சங்கர் கூறும்போது, இது மிகவும் சிக்கலானது, ஏனெனில் நீங்கள் உண்மையில் சிக்கல்களைத் தீர்க்க முயற்சிக்கிறீர்கள் என்று கூறினார். "அவர்கள் சிறிது நேரம் எடுத்துக் கொண்டால் அவ்வாறு செய்வதில் அவர்கள் நியாயப்படுவார்கள் என்று நான் நினைக்கிறேன். என்றார்.

ஐந்து நிமிடங்களில் வர்த்தக ஒப்பந்தம் இருக்கும் என்று எந்த அரசாங்கமும் கூறவில்லை. இது வெறும் ஊகம் தான் என்று ராஸ் கூறினார்." "மிக விரைவாக ஒன்று இருக்க முடியாது என்பதற்கு எந்தவொரு கட்டமைப்பு காரணமும் இல்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இறக்குமதிகளுக்கு, குறிப்பாக ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கு நூறு சதவீதம் வரை அதிக கட்டணம் வசூலிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக பதட்டங்கள் சிறிது காலமாக நடந்து வருகின்றன.

எனினும், உலக வர்த்தக அமைப்பிலிருந்து சில சர்ச்சைகளைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட வர்த்தக சிக்கல்களைத் தீர்ப்பதற்கு டெல்லி மற்றும் வாஷிங்டன் செயல்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 90 பில்லியன் டாலருக்கு அருகில் உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் அமெரிக்காவில் இருந்த போது ஒரு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்ற ஊகங்கள் இருந்தன, ஆனால் அது நடக்கவில்லை.

வர்த்தக சிக்கல்களை முடிவுக்குக் கொண்டு வருவது இந்தியா ஏற்றுமதியை அதிகரிக்கவும் உள்நாட்டு நுகர்வு வீழ்ச்சியால் ஏற்படும் பொருளாதார மந்தநிலையை குறைக்கவும் உதவும்.

.