ஃப்ளை டைனிங் மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படுகிறது
தரையிலிருந்து 160 அடி உயரத்தில் ஒரு சுவையான உணவை சாப்பிடுவதை கற்பனை செய்து பாருங்கள். சுவையான உணவும் சாகசமும் கலந்த உணர்வை டெல்லியில் உள்ள நொய்டாவில் பெறலாம்.
நொய்டாவில் சாகச பிரியர்களுக்கு தனித்துவமமான வழியில் உணவை அனுபவிக்க ஃப்ளே டைனிங் ரெஸ்டாரெண்ட் நொய்டா செக்டார் 38 ஏவில் தொடங்கப்பட்டுள்ளது.
24 இருக்கைக்கள் கொண்ட பெரிய டேபிள் க்ரேன் மூலம் உயர்த்தப்படுகின்றது. பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் பரிமாற வசதியும் செய்யப்பட்டுள்ளன.
இந்த புது வித ஐடியா நிகில் குமார் என்பவருக்கு தோன்றியது. துபாய் பயணத்தில் அங்கு ரசித்து அனுபவித்த ஒன்றையே டெல்லியில் செயல்படுத்திக் காட்டியுள்ளார்.
நிகில் குமார் கூறியதாவது, “ துபாயில் இந்தவிதமான உணவகத்தை கண்டேன். நாங்கள் இரண்டு ஆண்டுகளாக இதற்கு கவனம் செலுத்தி வருகிறோம். நாங்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான அனுபவத்தை பெற உறுதி செய்கிறோம். ஜெர்மனியைச் சேர்ந்த நிபுணர்கள் எங்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 4 அடி உயரத்திற்கு கீழே உள்ள கர்ப்பிணி பெண்களையும் குழந்தைகளையும் அனுமதிக்க மாட்டோம். அமர்ந்து உயரமான இடத்திற்கு செல்லும் முன் 3 முறை பாதுகாப்பு பெல்ட்டினை சரிபார்க்கிறோம். 40 நிமிடங்கள் அந்தரத்தில் இருந்து உணவு சாப்பிட்டபின் கீழே இறக்குகிறோம்.
ஃப்ளை டைனிங் மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படுகிறது. 40 நிமிடங்கள் 160 அடி உயரத்தில் அமரவைக்கப்படுகின்றனர்.
Click for more
trending news