This Article is From Jul 22, 2019

மும்பையில் எம்டிஎன்எல் கட்டிடத்தில் தீ விபத்து : 100 பேர் மொட்டை மாடியில் சிக்கியுள்ளனர்

ஒன்பது மாடி கட்டிடத்தில் தீ 3 மற்றும் 4 வது மாடி வரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

14 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் உள்ளன.

Mumbai:

மும்பையின் பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள கட்டிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் அரசு நடத்தும் தொலைதொடர்பு நிறுவனமான எம்.டி.என்.எல் செயல்பட்டு வருகிறது.  

கட்டிடத்தின் மொட்டை மாடியில் சுமார் 100 பேர் சிக்கியுள்ளனர். 14 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் உள்ளன. ஒன்பது மாடி கட்டிடத்தில் தீ 3 மற்றும் 4 வது மாடி வரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இது கட்டடம் புறநகர் பாந்ற்றாவில் எஸ்.வி சாலையில் அமைந்துள்ளது.  இந்த தீவிபத்து சம்பவத்தில் இதுவரை யாரும் காயமடைந்ததாக எந்த தகவலும் இல்லை. 

.