This Article is From May 13, 2019

சென்னையில் கோயம்பேடு அருகே தீ விபத்து

அதிக அளவிலான வெப்பம் காரணமாக காற்றில் வேகமாக தீ பரவியதால் அந்த பகுதி முழுவதுமே புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. சென்னை கோயம்பேடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து 6 தீயணைப்பு வீரர்கள் வாகனத்துடன் வந்து தீயை அணைத்து வருகின்றனர்.

சென்னையில் கோயம்பேடு அருகே தீ விபத்து

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. சென்னை கோயம்பேடு பின்புறம் உள்ள காலி மைதானத்தில், புற்கள், சருகுகள், மற்றும் அங்கிருந்த கழிவுகளில் இன்று பிற்பகலுக்கு பிறகு திடீரென தீ பிடித்தது. 

அதிக அளவிலான வெப்பம் காரணமாக காற்றில் வேகமாக தீ பரவியதால் அந்த பகுதி முழுவதுமே புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. சென்னை கோயம்பேடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து 6 தீயணைப்பு வீரர்கள் வாகனத்துடன் வந்து தீயை அணைத்து வருகின்றனர்.

ffkjt1b8

தீ மேலும் பரவாமல் தடுக்கவும், புகை மூட்டத்தை கட்டுப்படுத்தவும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை கொண்டு அணைத்து வருகிறார்கள். இதனிடையே தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து கோயம்பேடு போலீசார் அங்கு சென்று விசாரித்து வருகிறார்கள். இந்த தீ விபத்து காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய பகுதி முழுவதுமே புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது.

.