This Article is From Jan 19, 2019

''கொள்ளையர்களுக்கு எதிராக போராடுகிறோம்'' - பாஜக எதிர்ப்பு மாநாட்டில் ஹர்திக்

குஜராத்தில் படேல் இனத்தவர்களுக்காக இட ஒதுகீட்டு போராட்டங்களை நடத்தி தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியவர் ஹர்திக் படேல்.

''கொள்ளையர்களுக்கு எதிராக போராடுகிறோம்'' - பாஜக எதிர்ப்பு மாநாட்டில் ஹர்திக்

Hardik Patel is in Kolkata to be a part of the mega opposition rally organised by Trinamool Congress

Kolkata:

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வெள்ளையர்களுக்கு எதிராக போராடினார். நாம் கொள்யைர்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம் என்று படேல் சமூக இளம் தலைவர் ஹர்திக் படேல் பேசியுள்ளார். 


எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தி வரும் மாநாட்டில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பேசி வருகின்றனர். இந்த மாநாட்டில் படேல் சமூக இளம் தலைவர் ஹர்திக் படேல் பேசியதாவது-


எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களை ஒரே மேடைக்கு மம்தா பானர்ஜி கொண்டு வந்திருக்கிறார். அவருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். ஆட்சியில் இருந்து பாஜக அகற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இந்தக் கூட்டம் நமக்கு சொல்கிறது. 


இது (கொல்கத்தா) நேதாஜி சுபாஷ் சந்திபோஸ் பிறந்த மண். அவர் வெள்ளையர்களை எதிர்த்து போராடினார். நாம் கொள்ளையர்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம். 


இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சரத் யாதவ், சரத் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டுக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். 
 

.