This Article is From Oct 16, 2019

நெருக்கடியில் P Chidambaram… INX Media வழக்கில் அமலாக்கத்துறை கைதுக்கு அனுமதி!

P Chidambaram INX media case: சில நாட்களுக்கு முன்னர் அமலாக்கத் துறை, சிதம்பரத்தைக் கைது செய்ய வேண்டும் என்றும், தங்கள் கஸ்டடியில் சிதம்பரத்தை வைத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் முறையிட்டது

நெருக்கடியில் P Chidambaram… INX Media வழக்கில் அமலாக்கத்துறை கைதுக்கு அனுமதி!

தற்போது P Chidambaram, சிபிஐ அமைப்பு தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். 

New Delhi:

ப.சிதம்பரத்துக்கு எதிராக தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், அவரைக் கைது செய்ய அமலாக்கத் துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தற்போது சிதம்பரம், சிபிஐ அமைப்பு தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். 

கடந்த 2000 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ, ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி கைது செய்தது. பின்னர், அவரை காவலில் எடுத்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, சில நாட்களுக்கு முன்னர் அமலாக்கத் துறை, சிதம்பரத்தைக் கைது செய்ய வேண்டும் என்றும், தங்கள் கஸ்டடியில் சிதம்பரத்தை வைத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் முறையிட்டது. அதில்தான் தற்போது, கைது செய்ய மட்டும் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. நாளை கைது அமலாக்கத் துறையால் கைது செய்யப்படும் சிதம்பரம், மாலை 4 மணி அளவில் நீதிமன்றத்தில் சரண் செய்யப்படுவார். அப்போது அமலாக்கத் துறை, அவரின் கஸ்டடிக்கு நீதிமன்றத்திடம் முறையிடும்.

.