This Article is From Nov 15, 2018

தீபிகா, ரன்வீர் ஜோடிக்கு கார்ட்டூன் மூலம் வாழ்த்து தெரிவித்த அமுல்!

பிங்க் நிற சேலையில் அமுல் பெண் தீபிகாவை பிரதிபலித்தார். ரன்வீரின் கார்ட்டூன் உருவம் தீபிகாவிற்கு வெண்ணையை ஊட்டி விடுவது போன்ற படத்தை அமுல் வெளியிட்டுள்ளது.

தீபிகா, ரன்வீர் ஜோடிக்கு கார்ட்டூன் மூலம் வாழ்த்து தெரிவித்த அமுல்!

ரன்வீர் மற்றும் தீபிகாவிற்கு அமுல் வாழ்த்து தெரிவித்தது.

ஹைலைட்ஸ்

  • அமுல் போஸ்டரில், ‘ரன்வீர் இனி சிங்கிள் இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தது.
  • தீபிக்‌ஷன் ஆஃப் டேஸ்ட் என்று தீபிகாவை குறிப்பிட்டுள்ளது.
  • அழகான போஸ்டர் மூலம் அமுல் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
New Delhi:

முதலில் புதுமணத் தம்பதிகளான ரன்வீர் மற்றும் தீபிகாவிற்கு வாழ்த்துக்கள். முக்கியமான நிகழ்வுகளை கிராபிக் போஸ்டர் மூலம் வெளிப்படுத்தும் அமுல், தற்போது தீபிகா மற்றும் ரன்வீர் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளது.

பிங்க் நிற சேலையில் அமுல் பெண் தீபிகாவை பிரதிபலித்தார். ரன்வீரின் கார்ட்டூன் உருவம் தீபிகாவிற்கு வெண்ணையை ஊட்டி விடுவது போன்ற படத்தை அமுல் வெளியிட்டுள்ளது. கோமோ லேக்கின் அழகிய பிம்பத்தை பிரதிபலிக்கும் பின்புறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில்‘ரன்வீர் இனி சிங்கிள் இல்லை' தீபிக்‌ஷன் ஆஃப் டேஸ்ட் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
 

 

 

தங்களது திருமண புகைப்படங்களை விருத்தினர்கள் வெளியிடக்கூடாது என்று ஏற்கனவே ரன்வீர், தீபிகா கூறிவிட்டதால், புகைப்படங்கள் எதுவும் வெளிவரவில்லை. அவர்களது ரசிகர் இந்த பாலிவுட் ஜோடியின் திருமண புகைப்படங்களை பார்க்க வேண்டுமென்று மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

தனக்கு நெருக்கமானவர்களை மட்டுமே திருமணத்திற்கு அழைத்துள்ளனர். தீபிகா மற்றும் ரன்வீர் திருமண புகைப் படத்தை தங்களது சமூக வலைதளத்தில் முதன்முதலில் வெளியிட விரும்புவதாக மணமக்களின் நெருங்கிய நட்பு வட்டாரம் தெரிவித்துள்ளது
 

 

 

ஏஎன்ஐ தகவலின் படி, முதலில் தென் இந்திய முறைப்படி திருமணம் நிகழ்ந்துள்ளது. வியாழனன்று வட இந்திய முறைப்படி திருமணம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலிய திருமணத்தில் பங்கு பெறாத கரண் ஜோகர் தனது வாழ்த்தினை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

 

இதேசமயம், இத்தாலியில் வில்லா தெல் பல்பியனெல்லோ எனும் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு தீபிகா மற்றும் ரன்வீர் சங்கீத் மற்றும் மெஹந்தி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இத்தாலியிலிருந்து திரும்பியதும், இந்த ஜோடியின் திருமண வரவேற்பு பெங்களூருவில் நவ.21 ஆம் தேதியும், மும்பையில் நவ.28 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

.