This Article is From Sep 10, 2019

Chandrayaan 2 News: விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு: இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்!

Chandrayaan 2 lunar lander Vikram: விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை இழந்த ஆர்பிட்டர் கருவி சிறப்பாக செயல்பட்டு வருகின்றது

Chandrayaan 2 News: விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு: இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்!

சந்திரயான் 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது

ஹைலைட்ஸ்

  • ஆர்பிட்டர், லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துள்ளது
  • விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் மோதியபடி தரையிறங்கியுள்ளது
  • தரையிறங்குவதற்கு சிலகணங்களுக்கு முன்னர்தான் லேண்டர் தொடர்பு இழக்கப்பட்டது
Bengaluru:

நிலவின் மேற்பரப்பில் இருக்கும் சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிந்துவிட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ அதிகாரபூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து முன்னர் தெரிவித்திருந்த இஸ்ரோ இயக்குநர் கே.சிவன், “நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் மோதி தரையிறங்கியுள்ளது. சந்திராயன் 2-வின் ஆர்பிட்டர், அதன் இடத்தை கண்டறிந்துள்ளது” என்று நேற்று கூறியிருந்தார். 

இன்று இஸ்ரோ ட்விட்டர் பக்கத்தில் லேண்டர் குறித்து “விக்ரம் லேண்டரை, சந்திராயன் 2 ஆர்பிட்டர் கண்டறிந்துள்ளது. ஆனால் அதனுடன் எந்தவித தொடர்பும் ஏற்படுத்த முடியவில்லை. அதனுடன் தொடர்பை ஏற்படுத்த அனைத்து வித முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது” என்று பதிவிடப்பட்டுள்ளது.

விக்ரம் லேண்டர் குறித்து முன்னர் தகவல் தெரிவித்த இஸ்ரோ விஞ்ஞானிகள், “லேண்டருக்கு பாதிப்பு இல்லை என்றாலும், அது சாய்ந்த நிலையில் இருக்கிறது” என்றனர். 

இன்னொரு இஸ்ரோ அதிகாரியோ, “லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்துவது கடினமான காரியம்தான்” என்றார். 

சந்திரயான் 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட அதேநாளில் புவிவட்டப்பாதையிலும் விண்கலம், நிலைநிறுத்தப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொரு நிலையாக அதிகரிக்கப்பட்டு நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சரியாக சேர்ந்த சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர் விண்கலம், சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரையிறங்குவதென திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, நிலவை நோக்கி பயணித்தது லேண்டர்.

எனினும், சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரிந்து நிலவில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் விக்ரம் லேண்டருக்குமான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் வருத்தத்துடன் அறிவித்தார். என்ன காரணத்தால் இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது குறித்த தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

இதையடுத்து, லேண்டர் விக்ரமின் சிக்னலை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அடுத்த 14 நாட்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாகவும், அதில் வெற்றிப் கிடைத்தால் நிலவில் இருந்து தேவையான தகவல்கள் நமக்கு கிடைக்கும்.  

ucpehe8k

லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யானின் புகைப்படம்

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை இழந்த ஆர்பிட்டர் கருவி சிறப்பாக செயல்பட்டு நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வந்து கொண்டு இருக்கிறது என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தகவல் தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரை கண்டறிந்ததாகவும் இஸ்ரோ தெரிவித்தது. தொடர்ந்து, விடுபட்ட தகவல் தொடர்பை மீட்கும் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் எனவும் தெரிவித்திருந்தது.

ANI தகவல்களுடன்

.