This Article is From Dec 22, 2018

‘100 ஸ்டாலின் வந்தாலும் முடியாது..!’- சவால்விடும் செல்லூர் ராஜூ

அதிமுக-வை அழிக்க ஒரு ஸ்டாலின் அல்ல 100 ஸ்டாலின்கள் வந்தாலும் முடியாது என்று பேசியுள்ளார் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ

‘100 ஸ்டாலின் வந்தாலும் முடியாது..!’- சவால்விடும் செல்லூர் ராஜூ

அதிமுக-வை அழிக்க ஒரு ஸ்டாலின் அல்ல 100 ஸ்டாலின்கள் வந்தாலும் முடியாது என்று பேசியுள்ளார் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ.

இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ராஜூவிடம், ‘மத்திய, மாநில அரசுகள் சிறுபான்மையினருக்கு எதிரான அரசியலை செய்து கொண்டிருக்கின்றன. விரைவில் இருவரும் துரத்தியடிக்கப்படுவார்கள். அதுவரை நான் தூங்க மாட்டேன் என்று ஸ்டாலின் பேசியுள்ளாரே… அது குறித்து…' என்றதற்கு,

‘மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருக்க வேண்டும். எதிரிகள் வளமுடன் இருந்தால் தான், நாம் சிறப்பாக பணியாற்ற முடியும். அப்போது தான் அதிமுக-வினர் இன்னும் சுறு சுறுப்பாக பணியாற்றுவார்கள். டாக்டர் கலைஞர் அவர்கள், வல்லமை மிக்கவர். அவரைப் போல ஒருவரை எதிர்த்து வேலை செய்வதைத் தான் அதிமுக-வினர் விரும்புவார்கள். அதைப் போலவே, ஸ்டாலின் செயல்படுவார் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால், அவர் போகிற போக்கைப் பார்த்தால், கூடிய விரைவில் தூக்கமிழந்து மன உளைச்சலால் பாதிக்கப்படுவார் என்று நினைக்கிறேன்.

அதிமுக-வை அழிக்க ஒரு ஸ்டாலின் அல்ல 100 ஸ்டாலின்கள் வந்தாலும் முடியாது. ஏன் அவர் மகன் உதயநிதி ஸ்டாலினும், அவர் பேரனும் வந்தால் கூட அதிமுக-வை அழிக்க முடியாது. குடும்ப அரசியலை ஊக்குவிக்கும் திமுக-வை மக்கள் என்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்' என்று சாடினார்.

.