This Article is From Aug 06, 2019

டெல்லியில் பெண்ணொருவருக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம்

டெல்லி மகளிர் ஆணையம், ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்குள் இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விரிவான நிலை அறிக்கையை வழங்குமாறு டெல்லி காவல்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

டெல்லியில் பெண்ணொருவருக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம்

வெள்ளிக்கிழமை டெல்லியின் மந்திர் மார்க்கில் கோயிலுக்கு சென்று திரும்பும் போது இரவு 8 மணியளவில் டாக்ஸி முன்பதிவு செய்துள்ளார்.

New Delhi:

தலைநகர் டெல்லியில் 21 வயது இளம்பெண்ணொருவர்  வண்டி ஓட்டுநரால் ‘போதை பொருள் கொடுக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக டெல்லி மகளிர் ஆணையம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. 

இளம்பெண்ணொருவர் வெள்ளிக்கிழமை டெல்லியின் மந்திர் மார்க்கில் கோயிலுக்கு சென்று திரும்பும் போது இரவு 8 மணியளவில் டாக்ஸி முன்பதிவு செய்துள்ளார். அந்த வண்டியில்  சென்றபோது  டெல்லி ஐஐடி அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறக்கி விடப்பட்டதாக காவல்துறையில் தெரிவித்தார். ஆனால் அவரது உடலில் காயங்கள் ஏதும் காணப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்தது. பெண் கொடுக்கும் தகவலில் சில முரண்பாடுகள் உள்ளதால் அவையும் சரிபார்க்கப்பட்டு வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

டெல்லி  மகளிர் ஆணையம், ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்குள் இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விரிவான நிலை அறிக்கையை வழங்குமாறு டெல்லி காவல்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

.