This Article is From May 17, 2019

தன் வீட்டு வாசலில் தண்ணீர் ஊற்றிய பெண்ணை கொலை செய்த நபர் கைது

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தன் வீட்டு வாசலில் தண்ணீர் ஊற்றிய பெண்ணை கொலை செய்த நபர் கைது

உடலின் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டார்.

New Delhi:

டெல்லி மஹிபல்பூர் பகுதியில் தன் வீட்டின் வாசலில் தண்ணீர் ஊற்றிய பெண்ணை  கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டார். 

இந்த சம்பவம் இரவு 7.50 மணியளவில் ரங்புரி பஹடியில் நடந்தது, 

காவல்துறையி குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்துள்ளது. “குற்றம் சாட்டப்பட்ட கோபால் ரேகாவை கொலை செய்த குற்றத்திற்காக கைது  செய்ததாக” டிசிபி தேவேந்தர் ஆர்யா கூறினார்.

கத்தியால் குத்தப்பட்ட ரேகாவை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயமே இதற்கு காரணம் என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

.