This Article is From Nov 15, 2019

INX Media Case: பிணை மறுக்கப்பட்டதால் ப.சிதம்பரத்துக்கு முற்றும் நெருக்கடி!

INX Media corruption case - முன்னதாக அவர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி, சிபிஐ அமைப்பு தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யபட்டார்.

INX Media Case: பிணை மறுக்கப்பட்டதால் ப.சிதம்பரத்துக்கு முற்றும் நெருக்கடி!

P Chidambaramக்கு சிபிஐ-யின் வழக்கில் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி பிணை கொடுக்கப்பட்டது.

New Delhi:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கை (INX Media Case) விசாரித்து வரும் டெல்லி உயர் நீதிமன்றம், முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரத்துக்குப் (P Chidambaram) பிணை கொடுக்க மறுத்துவிட்டது. 

முன்னதாக வழக்கு விசாரணையின் போது, ப.சிதம்பரம் மற்றும் அமலாக்கத் துறையின் அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ் கயித், நவம்பர் 8 ஆம் தேதி வழக்கை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். தற்போது பிணை மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவளிக்கப்பட்டு உள்ளது. 

கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி சிதம்பரம், அமலாக்கத் துறை தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டார். 

முன்னதாக அவர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி, சிபிஐ அமைப்பு தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யபட்டார். சிபிஐ-யின் வழக்கில் அவருக்கு கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி பிணை கொடுக்கப்பட்டது. 

கடந்த 2000 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது. 


 

.