This Article is From Feb 13, 2020

24 மணி நேரத்தில் கட்சியில் புதிதாக 11 லட்சம் பேர் இணைந்தனர்: ஆம் ஆத்மி பெருமிதம்!

பாஜக மேற்கொண்ட தீவிர பிரச்சாரங்கள் அனைத்தையும் முறியடித்து, டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி.

24 மணி நேரத்தில் கட்சியில் புதிதாக 11 லட்சம் பேர் இணைந்தனர்: ஆம் ஆத்மி பெருமிதம்!

மிஸ்டு கால் மூலம் கட்சியில் இணைவதற்கான மொபைல் எண்ணையும் ஆம் ஆத்மி வெளியிட்டது.

New Delhi:

டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலிருந்தும் 11 லட்சம் பேர் புதிதாக ஆம் ஆத்மியில் இணைந்ததாக அக்கட்சி தகவல் தெரிவித்துள்ளது. 

மிஸ்டு கால் மூலம் ஆம் ஆத்மி கட்சியில் இணைவதற்கான மொபைல் எண்ணையும் டெல்லியை சேர்ந்த அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஆம் ஆத்மியின் அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, 24 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளனர் என்பது எங்களின் மாபெரும் சாதனை என அக்கட்சி தெரிவித்துள்ளது. 

மற்றொரு ட்வீட்டர் பதிவில், டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலிருந்தும் 11 லட்சம் பேர் புதிதாக ஆம் ஆத்மியில் இணைந்ததாக அக்கட்சி தகவல் தெரிவித்துள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பல்வேறு மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மேற்கொண்ட தீவிர பிரச்சாரங்கள் அனைத்தையும் முறியடித்து, மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. 

பாஜக ஒற்றை இலக்கத்தில் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனினும், 2015 தேர்தலுடன் ஒப்பிடுகையில் அது கணிசமான தொகுதிகளை கூடுதலாக கைப்பற்றியுள்ளது. பாஜகவின் பிளவுப்படுத்தும் தேர்தல் பிரச்சாரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ஆம் ஆத்மியும், எதிர்கட்சிகளும் பாராட்டியது. இதுபோன்ற சர்ச்சைகளில் இருந்து விலகி இருந்த கெஜ்ரிவால் மின்சாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பிரச்சினைகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். 2013 வரை 15 வருடங்களாக டெல்லியை ஆண்டு வந்த காங்கிரஸ் இந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 

ஆம் ஆத்மி வெற்றி குறித்து கெஜ்ரிவால் கூறும்போது, “புதிய ரகமான அரசியலுக்கு இந்த தேர்தல் வெற்றி வித்திட்டுள்ளது. இது பாரத தாய்க்கு கிடைத்த வெற்றி” என்று கூறினார். மேலும், இது என்னுடைய வெற்றி மட்டுமல்ல. டெல்லி மக்களுடைய வெற்றி. என்னை மகனாக நினைத்த குடும்பத்தினருக்கு கிடைத்த வெற்றி. 24 மணிநேரமும் மின்சார வசதி பெற்றிருக்கும் குடும்பத்தினருக்கு கிடைத்த வெற்றி' என்று கூறினார். 

தொடர்ந்து, வரும் பிப்.16ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். டெல்லி ராம் லீலா மைதானத்தில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மனிஷ் சிசோடியா செய்தியாளர்களை சந்திப்பில் கூறும்போது, டெல்லியில் உள்ள அனைவரும் தங்களது மகன் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆசிர்வதிக்க வருகை தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார். 

.