This Article is From Jul 23, 2019

#NotMyDeepika: தீபிகா படுகோனுக்கு எதிராக நெட்டிசன்கள் பொங்குவதற்கான பின்னணி என்ன..?

லவ் ரஞ்சன், #MeToo பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்.

#NotMyDeepika: தீபிகா படுகோனுக்கு எதிராக நெட்டிசன்கள் பொங்குவதற்கான பின்னணி என்ன..?

அவருடன் இணைந்து தீபிகா பணியாற்றக் கூடாது என்று அவரது ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொங்கி வருகின்றனர்

ஹைலைட்ஸ்

  • இயக்குநர் லவ் ரஞ்சனின் அடுத்தப் படத்தில் தீபிகா நடிப்பார் எனப்படுகிறது
  • லவ் ரஞ்சன் மீது 'மீ டூ' புகார் உள்ளது
  • லவ் ரஞ்சன் படத்தில் தீபிகாவுக்கு ஜோடியாக ரன்பிர் நடிப்பார் எனப்படுகிறது
New Delhi:

பாலிவுட்டின் பிரபல நடிகை தீபிகா படுகோன். அடுத்ததாக அவர் லவ் ரஞ்சன் என்ற இயக்குநருடன் இணைந்து திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. லவ் ரஞ்சன், #MeToo பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். எனவே, அவருடன் இணைந்து தீபிகா பணியாற்றக் கூடாது என்று அவரது ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொங்கி வருகின்றனர். தீபிகாவின் அடுத்தப் படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஆனால், அவர் நடிகர் ரன்பிர் கபூருடன், ரஞ்சன் வீட்டிலிருந்து வெளிவரும் புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. 

இந்தப் படங்கள் வெளியானதைத் தொடர்ந்துதான், ‘தீபிகா, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் ஒருவரோடு தயவு செய்து நடிக்காதீர்கள்' என்று ரசிகர்கள் அறைகூவல் விடுத்து வருகின்றனர். 

ஒரு ட்விட்டர் பயனர், “குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவருடன் நீங்கள் நடிக்கும்போது, பாதிக்கப்பட்டவருக்கு அநீதி இழைப்பது மட்டுமல்ல, உங்களின் மாண்பையும் இழக்கிறீர்கள். ஒரு கலைஞராக உங்களது மதிப்பை நீங்கள் இழக்க நேரிடும் தீபிகா. இதை தயவு செய்து செய்யாதீர்கள்” என்று ஆதங்கப்பட்டுள்ளார். 

இந்த விவகாரத்தில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், தீபிகாவுக்கு ஜோடியாக ரஞ்சன் இயக்கும் படத்தில் ரன்பீர் கபூர்தான் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. அவருக்கு எதிராக ரசிகர்கள் இப்படிப்பட்ட கோரிக்கைகள் எதையும் வைக்கவில்லை. 

8d29m97

லவ் ரஞ்சன் வீட்டிற்கு வரும் தீபிகா.

27p7pkeo

லவ் ரஞ்சன் வீட்டில் ரன்பீர் கபூர்

பல பாலிவுட் திரைப்படங்களை இயக்கியுள்ள லவ் ரஞ்சன் மீது சென்ற ஆண்டு, ஒரு நடிகை #MeToo புகார் தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டு ரஞ்சன், பியார் கா பஞ்சனாமா என்கிற திரைப்படத்தை இயக்கினார். அப்போது அந்தப் படத்திற்கு தான் ஆடிஷன் செய்ததாகவும், அந்த ஆடிஷன் போது உள்ளாடையுடன் நிற்குமாறு ரஞ்சன் சொன்னதாகவும் அந்த நடிகை புகார் சொன்னார். இந்தப் புகாரை அடுத்து பல நடிகைகள் ரஞ்சனுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்கள். 

.