This Article is From Apr 23, 2020

'கொரோனா பாதித்தோரை பாகிஸ்தான் காஷ்மீருக்கு அனுப்புகிறது' - போலீஸ் டிஜிபி குற்றச்சாட்டு

ஜம்மு காஷ்மீரில் சுமார் 400 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பான்மையினர் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்தவர்கள். 3 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குப்வாரா மாவட்டத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஹைலைட்ஸ்

  • ஜம்மு காஷ்மீரில் 400 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
  • கொரோனா பாதித்தோரை இந்தியாவுக்கு அனுப்புவதாக பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு
  • ஒரு வாரத்திற்கு முன்பு ராணுவம் கொரோனா குறித்து எச்சரிக்கை செய்திருந்தது
Srinagar:

 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை ஜம்மு காஷ்மீருக்குள் அனுப்பி, அங்கு நோயை பரப்ப முயற்சித்து வருவதாக காவல்துறை தலைவர் தில்பாக் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் கந்தெர்பல் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தில்பாக் சிங் இன்று பார்வையிட்டார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது-

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஜம்மு காஷ்மீருக்கு அனுப்ப பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. இது உண்மை. இதுநாள் வரையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளைத்தான் இங்கு அனுப்பி வந்தது. 

ஆனால் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களை இந்தியாவுக்கு அனுப்பும் சதியை பாகிஸ்தான் செய்து வருகிறது. இதுகுறித்து நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒரு வாரத்திற்கு முன்பாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் கொரோனா பாதித்தோரை பாகிஸ்தான் அனுப்புகிறது என இந்திய ராணுவம் எச்சரித்திருந்தது. உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் ராணுவம் இந்த செய்தியை வெளியிட்டது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் டிஜிபியும் அதே தகவலை தெரிவித்துள்ளார். 

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மிர்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 

இம்மாத தொடக்கத்தில் மிக உயரமான கெரான் பகுதியில் 5 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களை நேருக்கு நேராக எதிர்கொண்டு இந்திய ராணுவத்தினர் கொன்று குவித்து வீர மரணம் அடைந்தனர். 

கடந்த சில நாட்களாக எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குப்வாரா மாவட்டத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஜம்மு காஷ்மீரில் சுமார் 400 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பான்மையினர் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்தவர்கள். 3 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21,393 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4,258 பேர் குணம் அடைந்துள்ளனர். 681 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,409 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.