This Article is From May 12, 2020

சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இருவர் கார் மோதி உயிரிழப்பு!

பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்லும் வழியில், வேகமாக வந்த கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இருவர் கார் மோதி உயிரிழப்பு!

சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இருவர் கார் மோதி உயிரிழப்பு!

Ambala/Raebareli:

உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானாவில் வெவ்வேறு விபத்துகளில் சொந்த ஊர் திரும்பிகொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்லும் வழியில், வேகமாக வந்த கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதேபோல், ரேபரேலியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த மற்றொரு புலம்பெயர் தொழிலாளியும் விபத்தில் உயிரிழந்துள்ளார். 

ஹரியானாவில், அம்பலா கன்டோன்மென்ட் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இரண்டு பேர் மீது இன்று காலை அதிவேகமாக வந்த எஸ்யூவி ரக கார் ஒன்று மோதியது. இதில், ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த விபத்து குறித்து விசாரித்த போலீசார், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊரான பீகாருக்கு நடந்து சென்றுகொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். அந்த சமயத்தில் அங்கு வந்த கார் கட்டுபாட்டை இழந்து அவர்கள் மீது மோதியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய ஒட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளார். கார் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதேபோல், உத்தர பிரதேசத்தில் மற்றொரு விபத்து சம்பவத்தில் 25 வயதே ஆன புலம்பெயர் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவக்குமார் என்ற அந்த இளைஞர் சைக்கிள் மூலம் ஒரு குழுவாக தனது சொந்த ஊருக்கு திரும்பிசென்றுகொண்டிருந்த போது அந்த விபத்து நேர்ந்துள்ளது. 

.