This Article is From Apr 24, 2020

இருதய நோய் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தை கேரளாவில் உயிரிழப்பு!

பிறக்கும்போதே இருதய நோயால் பாதிக்கப்பட்டுப் பிறந்த குழந்தை, நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.

இருதய நோய் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தை கேரளாவில் உயிரிழப்பு!

தற்போது கேரளா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 447 ஆக உயர்ந்துள்ளது

Kozhikode:

தேசிய அளவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட முதல் மாநிலம் கேரளமாகும். நாட்டில் கொரோனா தொற்று தொடக்க காலகட்டங்களில் முதல் இடத்திலிருந்த கேரளம் தற்போது, கொரோன தொற்று பரவல் தடுப்பு மற்றும், இறப்பு தடுப்பு விகிதங்களில் முன்னணியில் உள்ளது. இந்த நிலையில் பிறக்கும்போதே இருதய நோயால் பாதிக்கப்பட்டுப் பிறந்த குழந்தை, நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. பிறந்து நான்கு மாதங்களான இக்குழந்தை கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

கேரளாவில் இதுவரை 450 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 3 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். கேரளத்துடன் ஒப்பிடுகையில் மகாராஷ்டிரா, குஜராத், மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் 50 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இம்மூன்று மாநிலத்திலும், 450 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது கேரளா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 447 ஆக  உயர்ந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதிலும் உள்ள காவல்துறையினர், சுகாதார ஊழியர்கள், வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் பணியாளர்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் என அனைவருக்கும் சீரற்ற முறையில் நோய் எதிர்ப்பு பரிசோதனையை மேற்கொள்ள அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலமாக மாநில அளவில் கொரோனா தொற்று பரவல் சமூக பரவலாக பரிணாமமடைந்துள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திவிட முடியும் என  மாநில முதல்வர் பினராய் விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரிசோதனைகளில் கேரளா அடுத்தகட்டத்திற்குத் தயாராகியுள்ளது. சமூகப்பரவல் உறுதிப்படுத்தப்படுமாயின், தொற்று பரவலின் மையத்தினை கண்டறிய முடியாது. இந்த நிலையில் கேரள அரசு மேற்கொள்ளவிருக்கக்கூடிய சோதனைகள் குறித்து விரிவாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் கொரோனா அறிகுறி உள்ளவர்களின் தனிமைப்படுத்தல் காலம் 14 நாட்களிலிருந்து 28 நாட்களாக உயர்த்தியுள்ளது கேரளா. கண்ணூர் மாவட்டத்தில் 248 பேர் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் அவர்களில் 95 சதவிகிதமானோருக்கு கொரேனா அறிகுறிகள் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தனிமைப்படுத்தல் காலம் 14 நாட்களிலிருந்து 28 நாட்களாக உயர்த்தியுள்ளது என மூத்த மருத்துவரும் மாநில அரசால் நியமிக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் குழுவின் உறுப்பினருமான டாக்டர் முகமது அஷீல் என்.டி.டி.வியிடம் கூறியுள்ளார்.

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.