This Article is From Mar 31, 2020

தமிழகத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா- விழுப்புரத்தில் மட்டும் 3 பேருக்கு உறுதியானது!

Coronavirus in Tamilnadu: நேற்று வரை தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா- விழுப்புரத்தில் மட்டும் 3 பேருக்கு உறுதியானது!

Coronavirus in Tamilnadu: இதுவரை தமிழகத்தில் 6 பேர், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இதுவரை 74 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • தமிழகத்தில் 6 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளனர்
  • சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், தகவல் தெரிவித்துள்ளார்

Coronavirus in Tamilnadu: தமிழகத்தில் புதிதாக 7 பேருக்கு கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளார். 

“தமிழகத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில், சென்னையைச் சேர்ந்த 43 வயதான ஒருவர், சமீபத்தில் திருவனந்தபுரம் சென்று வந்ததால் தொற்று ஏற்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பிலிருந்த 28 வயது நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

டெல்லிக்குப் பயணம் செய்து திரும்பி வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. மூவரும் விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதேபோல, டெல்லிக்குப் பயணம் செய்து மதுரை திரும்பிய இருவருக்கு கொரோனா வந்துள்ளது. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். அனைவரின் ஆரோக்கியமும் சீராக உள்ளது,” என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

நேற்று வரை தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 6 பேர், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 


 

.