This Article is From Aug 04, 2020

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று: ஆகஸ்ட் 4 ஆம் தேதி அப்டேட்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 88,826 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று: ஆகஸ்ட் 4 ஆம் தேதி அப்டேட்!

மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 113 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 

ஹைலைட்ஸ்

  • சென்னையில் தொடர்ந்து 1000 பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது
  • சென்னையில் பாதிப்பைவிட டிஸ்சார்ஜ் விகிதம் அதிகமாக உள்ளது
  • சென்னையிலேயே கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆக்டிவ் கேஸ்கள் அதிகம்

தமிழகத்தில் நேற்று 5,609 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,021 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,63,222 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5,800 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 2,02,283 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 56,698 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 109 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 4,241 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (04.08.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 453

மணலி - 113

மாதவரம் - 619

தண்டையார்பேட்டை - 661

ராயபுரம் - 827

திரு.வி.க நகர் - 931

அம்பத்தூர் - 1,334

அண்ணா நகர் - 1,250

தேனாம்பேட்டை - 900

கோடம்பாக்கம் - 1,357

வளசரவாக்கம் - 890

ஆலந்தூர் - 561

 அடையாறு - 944

பெருங்குடி - 526

சோழிங்கநல்லூர் - 449

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 168

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 88,826 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 86 சதவீத மீட்பு விகிம் ஆகும். 2,176 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 11,983 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,222 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,357 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து அம்பத்தூர் மண்டலத்திலும் மற்றும் அண்ணா நகர் மண்டலத்திலும் முறையே 1,334 மற்றும் 1,250 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 113 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 

.