This Article is From Jul 15, 2020

சென்னையில் கொரோனா: பாதிக்கப்பட்ட 79% பேர் டிஸ்சார்ஜ் - ஜூலை 15 மண்டலவாரி நிலவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 62,552 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா: பாதிக்கப்பட்ட 79% பேர் டிஸ்சார்ஜ் - ஜூலை 15 மண்டலவாரி நிலவரம்!

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,199 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் இதுவரை 1,295 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்
  • இறப்பு விகிதம் 2 சதவீதத்துக்குக் கீழ் உள்ளது
  • சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிக பாதிப்பு உள்ளது

தமிழகத்தில் நேற்று 4,526 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,078 பேர். ஒட்டுமொத்த அளவில் 1,47,324 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4,743 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 97,310 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 47,912 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 67 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 2,099 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (15.07.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 608

மணலி - 280

மாதவரம் - 438

தண்டையார்பேட்டை - 1,006

ராயபுரம் - 1,214

திரு.வி.க நகர் - 998

அம்பத்தூர் - 943

அண்ணா நகர் - 1,560

தேனாம்பேட்டை - 1,497

கோடம்பாக்கம் - 2,199

வளசரவாக்கம் - 914

ஆலந்தூர் - 508

 அடையாறு - 1,164

பெருங்குடி - 353

சோழிங்கநல்லூர் - 464

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,668

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 62,552 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 79 சதவீத மீட்பு விகிம் ஆகும். 1,295 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 15,814 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,858 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,199 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து அண்ணா நகர் மண்டலத்திலும் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்திலும்  முறையே 1,560 மற்றும் 1,497 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 280 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 
 

.