This Article is From Apr 01, 2020

கொரோனா தொற்றுக்கு தனது முதல் உயிரிழப்பை பதிவு செய்தது உ.பி

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.6 லட்சத்தினை கடந்திருக்கின்றது. மேலும், இறப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்தினை கடந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்கு தனது முதல் உயிரிழப்பை பதிவு செய்தது உ.பி

Gorakhpur:

இந்தியாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்தியா முழுவதும் 1200க்கும் அதிகமானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சூழலில், கிட்டதட்ட 35 மரணமடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் தங்களுடைய முந்தைய பயண விவரங்களை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

இப்படியான சூழலில், சுவாச கோளாறுடன் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோரக்பூரின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் மரணமடைந்திருக்கிறார். அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பின்னர் மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்திருக்கின்றது.

மார்ச் 28-ம் தேதியன்று கோரக்பூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஸ்தியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் சுவாச கோளாறுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நோயாளியின் முந்தைய பயண வரலாறு குறித்த எவ்வித தகவலையும் குடும்பத்தினர் மருத்துவரோடு பகிர்ந்துக்கொள்ளாததனால், நோயாளி பொது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறார். சமீபத்தில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை கண்டறிந்ததையடுத்து, அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவமனையின் ஊழியர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்திருக்கின்றது.

இறந்த நோயாளியின் உறவினர்கள்,, நோயாளியின் முந்தைய பயணங்களை மறைத்தது குற்றம். காய்ச்சல் இல்லாமல் வெறும் சுவாசக் கோளாறு மட்டுமே இருந்தமையால் நாங்கள் அவரை பொது வார்டில் அனுமதிக்க வேண்டியதாயிற்று. நோயாளி மும்பையிலிருந்து திரும்பி வந்திருக்கிறார் என நோயாளியின் குடும்பத்தினர் யாரேனும் குறிப்பிட்டிருந்தால், நாங்கள் முன்னெச்சரிக்கையாக நோயாளியை கொரோனா வார்டிற்கு மாற்றியிருப்போம். என்று மருத்துவமனை பொறுப்பாளர் டாக்டர் ஓ.பி. சிங் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

பஸ்தி மாவட்ட மருத்துவமனையிலிருந்து கோரக்பூரின் சிறப்பு உயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கேயும் அந்த நபர் பொது வார்டிலேயே வைக்கப்பட்டிருந்திருக்கிறார். இறந்த நோயாளி மும்பையிலிருந்து திரும்பி வந்திருப்பதை அம்மாநில அரசு உறுதிப்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை மாலை இறந்த அவரது உடலை இறுதி சடங்குகளுக்காக பாஸ்திக்கு கொண்டு வந்த உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் நோயாளிக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பஸ்தியில் அவர் வாழ்ந்த பகுதிகளுக்கு மாவட்ட அதிகாரிகள் சீல் வைத்திருக்கின்றனர். மேலும், நோயாளியின் உறவினர்கள் மற்றும், அவருடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து அவர்களை மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தியிருக்கின்றது.

"நாங்கள் ஏராளமான மக்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. எனவே, நோயாளியின் குடும்பத்தினர் ஒத்துழைக்க வேண்டும், இல்லையெனில் இந்த சவால்களைச் சமாளிப்பது எங்களுக்கு மிகவும் கடினமா இருக்கும்" என்று உ.பி. அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட (தொற்றுநோய்கள்) இயக்குநர் டாக்டர் விகாசெண்டு அகர்வால் ( ஐ.டி.எஸ்.பி), தெரிவித்திருக்கிறார்.

தேசிய தலைநகரை ஒட்டியுள்ள, நொய்டாவில் 39 பேர், மற்றும் மீரட் மாவட்டத்தில் 19 பேர் என மாநிலம் முழுவதும் 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு நிர்வாகம் கண்டறிந்திருக்கின்றது.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.6 லட்சத்தினை கடந்திருக்கின்றது. மேலும், இறப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்தினை கடந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths

 

.