This Article is From Apr 02, 2020

டெல்லி மதக் கூட்டம்: 9000 பேருக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம்!

7,688 உள்ளூர் நபர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த எல்லா முயற்சிகளையும் எடுத்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

டெல்லி மதக் கூட்டம்: 9000 பேருக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம்!

இந்தியா முழுவதிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள்

ஹைலைட்ஸ்

  • இந்த குழுவில் பங்கேற்ற சுமார் 400 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
  • மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்தும் மற்றும் இந்தியா
  • அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்
New Delhi:

கடந்த மாதம் டெல்லியில் இஸ்லாமிய மிஷனரி ஒன்று, ஒரு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது, இந்த மாநாட்டில் சுமார் 7600 இந்தியர்கள் மற்றும் 1300 வெளிநாட்டினர் கலந்துகொண்டதாகவும் தற்போது இந்த நிகழ்வு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மிகப்பெரிய இடமாக உருவெடுத்துள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்ற தகவலும் வந்துள்ளது. 

டெல்லியின் நிஜாமுதீன் மேற்கு பகுதியில் உள்ள இந்த இடம் கொரோனா தொற்றின் அதிக ஆபத்தை கொண்டிருப்பதால் பிற நாடுகளைச் சேர்ந்த 1,306 உறுப்பினர்களை அடையாளம் காண இருபத்தி மூன்று மாநிலங்களும் நான்கு யூனியன் பிரதேசங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஏப்ரல் 1ம் தேதி வரை உள்துறை அமைச்சகத்தால் சேகரிக்கப்பட்ட தகவலின்படி, சுமார் 1,051 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், அதில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இருவர் இறந்துள்ளனர்.

தப்லீஜி ஜமாத்தில் பங்கேற்ற 7,688 உள்ளூர் நபர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த எல்லா முயற்சிகளையும் எடுத்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "இந்த நிகழ்வு குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும், ஏப்ரல் 1 ஆம் தேதி வரை, பெரும்பாலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பங்கேற்பாளர்களை அடையாளம் காண முடிந்துள்ளது என்றும் பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் என்.டி.டிவிக்கு தெரிவித்தார்.

இந்த குழுவில் பங்கேற்ற சுமார் 400 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில அரசுகள் மற்றும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாகத் தமிழகத்தில் 190 பேர், மேலும் ஆந்திராவில் 71 பேர், டெல்லியில் 53 பேர், தெலுங்கானாவில் 28 பேர், அசாமில் 13 பேர், மகாராஷ்டிராவில் 12 பேர், அந்தமான் 10 பேர், ஜம்மு-காஷ்மீரில் ஆறு பேர், புதுச்சேரி மற்றும் குஜராத்தில் தலா இரண்டு பேர். 

மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்தும் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த மாதம் நிஜாமுதீனில் ஒரு குறுகிய பாதையின் வழியாக சென்று தப்லிகி ஜமாத்தின் தலைமையகத்தை பார்வையிட்டனர். மேலும் அவர்கள் பல நாட்கள் பிரார்த்தனை மற்றும் சொற்பொழிவுகளில் பங்கேற்றுள்ளனர். நாடு முழுவதும் பூட்டப்பட்டதால் பொது போக்குவரத்து மற்றும் அனைத்து இயக்கங்களும் நிறுத்தப்படாததால், கூட்டம் முடிந்ததும், மற்றவர்கள் நகரத்தை விட்டு வெளியேறிய நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் மார்க்காஸ் மற்றும் மையத்தின் அருகில் உள்ள தங்குமிடங்களுக்குள் சிக்கித் தவித்ததாக தப்லிகி ஜமாஅத் கூறினர். 

புதன்கிழமை முடிவடைந்த 36 மணி நேர பணியில் 2,335 பேர் தப்லிகி மையம் மற்றும் அதன் மசூதியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார். மேலும் "அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனைகளில் உள்ளனர்" என்றும் அவர் கூறினார்.

.