This Article is From May 31, 2020

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா! 13 பேர் உயிரிழப்பு!!

இன்று 757பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 12,757 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா! 13 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 1,149 பேர் இன்று தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதே போல 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலமாக மாநிலம் முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 22,333 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்களில் 804 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையில் ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் முதல் முறையாக 800ஐ கடந்துள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்தமாக 14,802 பேர் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 85 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இன்று 757பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 12,757 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் 4,91,962 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் 12,807 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ன. தற்போது 9,400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

.