This Article is From Feb 02, 2020

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..!

காய்ச்சல் மற்றும் சுவசக்கோளாறு பிரச்சினைகளுக்காக சோனியா காந்தி, டெல்லி கங்கா ராம் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..!
New Delhi:

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் சுவசக்கோளாறு பிரச்சினைகளுக்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டெல்லியில் நேற்றிரவு 7 மணி அளவில் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருடன் அவரது மகன் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் மருத்துவமனையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

எனினும், சோனியா காந்தி வழக்கமான உடல் பரிசோதனைக்கு தான் மருத்துவமனை வந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த இரண்டு நாட்களாக சோனியாக காந்தி உடல்நலக்குறைவாக இருந்து வந்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சனிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, சோனியா காந்தி அதில் பங்கேற்கவில்லை.

.