This Article is From Aug 27, 2018

புதுச்சேரி உயர் கல்வி மையங்களின் முன்னேற்ற நிதியை 100% ஆக உயர்த்த கோரிக்கை

ராஷ்ட்ரிய உச்சாச்கர் சிக்‌ஷா அபியன் திட்டத்தின் கீழ், புதுச்சேரி உயர் கல்வி மையங்களின் முனேற்றங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது

புதுச்சேரி உயர்கல்வி மையங்களை தரம் உயர்த்த மத்திய அரசு வழங்கும் நிதியை 100% ஆக உயர்த்த முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை வைத்துள்ளார். 

ராஷ்ட்ரிய உச்சாச்கர் சிக்‌ஷா அபியன் திட்டத்தின் கீழ், புதுச்சேரி உயர் கல்வி மையங்களின் முனேற்றங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. இது முன்னர் 100% ஆக இருந்தது. ஆனால், பின் 60:40 என்ற விகிதமாக குறைக்கப்பட்டது. அதை மீண்டும் 100% ஆக உயர்த்தக் கோரியுள்ளார் புதுச்சேரி முதலமைச்சர். 

இந்த கோரிக்கையை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கரிடம் வைத்துள்ளதாக, புதுச்சேரி அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பில், புதுச்சேரி சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் உடனிருந்ததாக, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.