This Article is From Dec 09, 2019

10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 10-ம் வகுப்பு மாணவன்! போலீசார் வழக்குப்பதிவு!!

குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 14 வயது சிறுவனான 10-ம் வகுப்பு மாணவன் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது அவர் காப்பகத்தில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 10-ம் வகுப்பு மாணவன்! போலீசார் வழக்குப்பதிவு!!

சிறுமி பள்ளிக்குச் செல்லும்போது அவரை பலாத்காரம் செய்ததாக சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Shimla:


10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 10-ம் வகுப்பு மாணவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன் தற்போது, காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளார். 

இமாச்சல பிரதேச மாநிலம் குளு மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு 10 வயது சிறுமி ஒருவர் பள்ளிக்குச் செல்லும் வழியில் 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

இருவரும் உறவினர்களாக உள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரில் முகாந்திரம் இருப்பதாக கருதி போலீசார் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 376 பி (12 வயதுக்குட்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததற்கான தண்டனை), சிறார்களை பாலியல் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் POCSO சட்டத்தின் பிரிவுகள் 4 மற்றும் 6 ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சிறுவனை கைது செய்த போலீசார் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். தற்போது அவர் உனாவில் உள்ள சிறார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். 
 

.