This Article is From May 15, 2019

பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் வன்முறை! போலீஸ் - போராட்டக்காரர்கள் மோதல்!!

Lok Sabha Election 2019: மேற்கு வங்கத்தில் மே 19-ம்தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக தலைவர் அமித் ஷா (Amit Shah) அங்கு பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்.

பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் வன்முறை! போலீஸ் - போராட்டக்காரர்கள் மோதல்!!

Amit Shah Rally: மேற்கு வங்க பொதுக் கூட்டங்களில் மம்தா - அமித் ஷா இடையே வார்த்தைப்போர் நடக்கிறது

New Delhi:

Vidyasagar College: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித் ஷா (Amit Shah) பங்கேற்ற பொதுக்கூட்டத்தை தொடர்ந்து வன்முறை வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். 

வன்முறை நடந்த இடங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்களில் காவி உடை அணிந்த சில கற்களை வீசுவது போல் உள்ளது. அமித் ஷா (Amit Shah) பங்கேற்ற பொதுக் கூட்டம் இன்று மாலை 4.30-க்கு மத்திய கொல்கத்தாவின் எஸ்ப்ளனேட் பகுதியில் தொடங்கியது. 

மே 19-ம்தேதி மேற்கு வங்கத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரசாரத்தில் பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் பாஜக - திரிணாமூல் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. 

மேற்கு வங்க தேர்தல் களத்தில் பாஜக, திரிணாமூல் கட்சி தலைவர்களின் பேச்சும், பதிலடியும் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 
 

.