This Article is From Jun 17, 2020

இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள மோதலை தவிர்க்க விரும்புகிறோம்: சீனா

இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், குறைந்தது 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள மோதலை தவிர்க்க விரும்புகிறோம்: சீனா

இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள மோதலை தவிர்க்க விரும்புகிறோம்: சீனா

ஹைலைட்ஸ்

  • இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள மோதலை தவிர்க்க விரும்புகிறோம்: சீனா
  • இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த பிரச்னையை தீர்ப்பார்கள்
  • நாங்களும், நிச்சயமாக அடுத்தடுத்து மோதல்களைக் காண விரும்பவில்லை
Beijing:

இரண்டு அணுசக்தி நாடுகளுக்கு இடையிலான முதல் கொடிய மோதல் நிகழ்ந்து பல தசாப்தங்கள் கழித்து தற்போது இமயமலை எல்லையில் இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள மோதலை தவிர்க்க விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது. 

திங்கட்கிழமையன்று, இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், குறைந்தது 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதில், சீனா தனது தரப்பில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதை இதுவரை உறுதிப்படுத்த மறுத்துவிட்டது.

இந்திய ராணுவ வீரர்கள் தான் எல்லையைத் தாண்டி சீனத் தரப்பை தாக்கியதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார். 

இது இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு கடுமையான மோதலுக்கு வழிவகுத்ததால் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டதாக ஜாவோ கூறுகிறார். எனினும், அவர் உயிரிழப்பு குறித்து கூடுதல் விவரங்கள் எதுவும் கூறவில்லை. 

தொடர்ந்து அவர் கூறும்போது, முன்னணியில் உள்ள வீரர்களை கண்டிப்பாக கட்டுப்படுத்தவும், சட்டவிரோதமாக எல்லையை கடக்க வேண்டாம். ஆத்திரமூட்டும் சைகைகளை செய்ய வேண்டாம். எல்லை நிலைமையை சிக்கலாக்கும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என்று சீனா இந்தியாவை வலியுறுத்துகிறது என்றார்.

எனினும், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த பிரச்னையை தீர்ப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார். 

நாங்களும், நிச்சயமாக அடுத்தடுத்து மோதல்களைக் காண விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.